ஆப்நகரம்

ஈரோடு கருங்கல்பாளையத்தில் 850 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்- 2 பேர் கைது

ஈரோடு கருங்கல்பாளையத்தில் 850 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Edited byசு. கணபதி சுப்பிரமணியன் | Samayam Tamil 10 May 2023, 7:35 am

ஹைலைட்ஸ்:

  • கருங்கல்பாளையத்தில் 850 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்
  • 2 பேர் கைது
  • ஈரோடு கிளை சிறையில் அடைப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Erode
Erode
ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் கூடுதல் இயக்குனர் அருண் உத்தரவின் பேரில், கோவை கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் ஈரோடு இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டும், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டும் வருகின்றனர்.
மதுரையில் திமுக கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு அண்டா பரிசு...முண்டியடித்துக் கொண்டு அண்டாவை தூக்கிச் சென்ற தொண்டர்கள்
ரோந்து பணி
இந்த சோதனையில் ரேஷன் அரிசியை கடத்தியவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும், மேலும் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

850 கிலோ அரிசி

அப்போது கருங்கல்பாளையம் கமலா நகர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்ட போது 850 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
கைது செய்தனர்
இது தொடர்பாக கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சூர்யா (27), பிரகாஷ் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வட மாநிலத்தவர்களிடம் கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருந்ததாக தெரிவித்தனர்.
டெங்கு காய்ச்சல் பரவாமல் நடவடிக்கை-பெரியகுளம் நகராட்சி ஆணையாளருக்கு பொதுமக்கள் பாராட்டு
சிறையில் அடைப்பு
இதனையடுத்து சூர்யா, பிரகாஷ் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்ற த்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
எழுத்தாளர் பற்றி
சு. கணபதி சுப்பிரமணியன்
நான் கணபதி சுப்பிரமணியன். ஊடகத்துறையில் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். தேசிய, சர்வதேச, சினிமா செய்திகள் எழுதிய அனுபவம் உள்ளது. இப்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி