ஆப்நகரம்

அந்தியூரில் மொட்டை மாடியில் பிணமாக கிடந்த 'குடிமகள்'; சாவில் மர்மம்.. போலீஸ் தீவிர விசாரணை!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள மொட்டை மாடியில் பெண் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 30 May 2023, 11:45 am

ஹைலைட்ஸ்:

  • அந்தியூரில் பெரும் பரபரப்பு
  • மொட்டை மாடியில் பிணமாக கிடந்த பெண்
  • உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு
  • அந்தியூர் போலீசார் தீவிர விசாரணை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil அந்தியூரில் மொட்டை மாடியில் பிணமாக கிடந்த குடிமகள்
அந்தியூர் அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள மொட்டை மாடியில் பெண் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்தியூரில் மொட்டை மாடியில் பிணமாக கிடந்த குடிமகள்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர், புதுக்காடு செல்லும் சாலையின் அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஒரு பெண் பிணம் கிடப்பதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மொட்டை மாடியில் இறந்து நிலையில் கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிணமாக கிடந்த பெண் யார் என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

விசாரணையில் அவர் அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மனைவி செல்வி (45) என்று தெரியவந்தது.


சாவில் மர்மம்:

மேலும் போலீசாரின் விசாரணையில் செல்விக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவ்வப்போது வீட்டை விட்டு செல்லும் செல்வி 2 நாட்கள் கழித்து மீண்டும் வீட்டுக்கு வந்து விடுவார் எனவும், இதனால் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற செல்வி குறித்து குடும்பத்தினர் போலீசில் புகார் செய்ய வில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் செல்வி பிணமாக மீட்கப்பட்டார்.

ஈரோட்டில் 10 ரூபாய்க்கு 3 வேளையும் அன்லிமிடெட் சாப்பாடு; இந்த மனசு யாருக்கு வரும்?.. குவியும் பாராட்டு..!

போலீஸ் தீவிர விசாரணை:

மேலும் அவர் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தி வருகின்றனர். மேலும் குடிபோதையில் ஒரு வீட்டின் மொட்டை மாடிக்கு படி வழியாக ஏறிச் சென்று அங்கு கீழே விழுந்து இறந்து கிடந்ததும் தெரிய வந்ததுள்ளது. மேலும் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026ல் மதுரை எய்ம்ஸ்; மத்திய அமைச்சர் கொடுத்த செம அப்டேட்.. இப்பவாச்சும் சொன்னீங்களே..!

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் மொட்டை மாடியில் பெண் ஒருவர் பிணமாகக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி