ஆப்நகரம்

சிலக் ஸ்மிதாவுடன் செல்ஃபி எடுத்துக்க ஆசையா... அப்போ இந்த டீ ஸ்டாலுக்கு வாங்க!

சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகரான டீ கடை உரிமையாளர், தமது கடை முழுவதையும் அவரது படங்களால் அலங்கரித்து வாடிக்கையாளர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

Samayam Tamil 29 Aug 2021, 11:11 am

ஹைலைட்ஸ்:

  • ஈரோடு பஸ் நிலையத்தில் டீ கடை வைத்துள்ளவர் சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகராக உள்ளார்.
  • கடை முழுவதும் சில்கின் விதவிதமான படங்களால் அலங்கரித்துள்ளார்.
  • கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சில்க் படங்களின் பின்னணியில் செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
சில்க் ஸ்மிதா என்றாலே கவர்ச்சி நடன நடிகை என்று அனைவரது எண்ணத்திலும் பதிந்து இருக்கும் நிலையில், ஈரோட்டில் தேநீர் கடை வைத்து நடத்தும் குமாரின் நினைவுகளில் அவர் தைரியமான நடிகை என்றே பதிவாகி உள்ளார்.
ஈரோடு பேருந்து நிலையம் அருகே நாச்சியப்பா வீதியிலுள்ள அந்த பிரபல டீ ஸ்டால் தற்போது 'சிலுக்கு கடை' என்றே அழைக்கப்படுகிறது. உள்ளே நுழைந்தால் திரும்பிய பக்கமெல்லாம் சில்க் ஸ்மிதாவின் ரசிக்கவைக்கும் படங்கள் நிரம்பி உள்ளன.

கவர்ச்சி நடிகை என்ற நமது பார்வையையே மாற்றும் அளவுக்கு அங்கு இருக்கும் புகைப்படங்கள் நம்மை வசீகரிக்கின்றன. கடையின் சுவர், மேற்பகுதி, குளிர்சாதன பெட்டி என எங்கெங்கும் அவரின் அழகான புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

இதில் இன்னும் ஒரு படி மேலாக வருடம்தோறும் சில்க் புகைப்படம் உள்ள நாட்காட்டி தயார் செய்து, அதை தனது நண்பர்களுக்கும், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார் கடையின் உரிமையாளர் குமார். தினமும் அவரது படத்திற்கு ஒற்றை ரோஜாவும் வைத்து விடுகிறார்.

சினிமாவில் எனக்கு மறுபிறவி.. நல்ல நேரம் பொறந்தாச்சு: வைகை புயல் வடிவேலு நெகிழ்ச்சி!

கடை முழுவதும் சில்க் ஸ்மிதா படங்களாக அலங்கரிக்கப்பட்டிருப்பசு குறித்து கடையின் உரிமையாளர் குமார் கூறும்போது, ',தமிழ் திரையில் மிகவும் தைரியமான நடிகை சில்க் ஸ்மிதா மட்டுமே. இயக்குனர் பாலுமகேந்திராவால் கேமராவுக்கு ஏற்ற முகம் உள்ள நடிகை என பெயர் வாங்கியவர்.

தனக்கு மிகவும் பிடித்த நடிகை என்பதால் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளான டிசம்பர் 2 ஆம் தேதி, அடுத்த ஆண்டுக்கான காலண்டர்களை அவரது படத்துடன் அச்சிட்டு நண்பர்கள், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இனிப்பு கொடுத்து வழங்கி வருவதாகவும், இதில் முத்தாய்ப்பாக மதுரை மற்றும் சென்னையில் இருந்து அவரது தீவிர ரசிகர்கள் சிலர் இந்த நாட்காட்டியை ஈரோட்டுக்கு வந்து வாங்கி செல்கின்றனர்.

முதன்முறையாக கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சில்க் படங்களை கண்டு சற்றே அதிர்ச்சி அடைந்தாலும், பின்னர் அவர்களே சில்க் படங்களின் பின்னணியில் செல்ஃபியும் எடுத்தும் செல்கின்றனர்.

முன்னாள் அமைச்சர் அத்து மீறல்?; பிடிஓவிடம் திமுக கூட்டணி புகார்!

திரைப்படங்களில் நடித்த காலத்தில் பலரின் கனவுகளை கலைத்து கொண்டிருந்தவர், இறந்து 25 ஆண்டுகள் கடந்தும், ஒருவரின் விரசம் அற்ற நினைவலைகளில் மிகவும் உயரமான சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்,மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 450 படங்களுக்கும் மேல் நடித்து புகழ்பெற்றவர் விஜயலட்சுமி என்கிற சில்க் ஸ்மிதா. நடிகர் வினுசக்கரவர்த்தியின் 'வண்டிக்காரன்' படத்தில் சில்க் எனும் கதாபாத்திரத்தில் அவர் அறிமுகமானார்.அந்த கதாபாத்திரத்தின் பெயரே அவரை அழைக்கும் பெயராக மாறிப் போனது.

அடுத்த செய்தி