ஆப்நகரம்

போதை ஊசிகளுடன் காரில் வந்த இளைஞர்.. மடக்கி பிடித்த போலீசார்.. விசாரணையில் பகீர் தகவல்!

ஈரோட்டில் காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சா மற்றும் போதை ஊசிகளை கைப்பற்றி, கடத்தி வந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 19 Aug 2022, 4:49 pm

ஹைலைட்ஸ்:

  • ஈரோட்டில் சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட
  • போதை ஊசிகள், கஞ்சா பொட்டலங்கள் சிக்கியது‌
  • வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil போதை ஊசிகளுடன் காரில் வந்த இளைஞர் கைது
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக போலீசார் மாவட்டம் முழுவதும் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், கஞ்சா ஆகியவற்றை விற்பனை செய்பவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
அவர்களிடமிருந்து கஞ்சா, போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கருங்கல்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையான போலீசார் பவானி மெயின் ரோடு, பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு வெள்ளை கலர் சொகுசு கார் வந்து கொண்டிருந்தது. திடீரென போலீசாரை பார்த்ததும் அந்த கார் நின்றுள்ளது. அந்த காரில் ஒரு வாலிபர் இருந்துள்ளார். மேலும் அந்த இளைஞர் காரை பின்னோக்கி வேகமாக எடுக்க முயன்றுள்ளார்.


இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்தக் காரை மடக்கி பிடித்தனர். காரை சோதனை செய்தபோது காரில் 1,100 கிலோ கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. மேலும் போதை ஊசிகள், சிரஞ்சுகள், பாட்டில்கள் உள்பட சில மூலப் பொருட்களும் இருந்தன.

இது குறித்து அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் வீரப்பன்சத்திரம் அடுத்த சூளை அருள்வேலவன் நகரை சேர்ந்த முகமது ஆஷிக் (28) என்பதும் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் அவர் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றதையும் ஒப்புக்கொண்டார். கஞ்சா போதை ஏறுவதற்காக சிகரெட் போன்று மடித்து அதில் கஞ்சாவை வைத்து பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது ஆசிக்கை கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன . தொடர்ந்து அவரிடம் போலீசார் இந்த கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து வாங்கி வரப்பட்டது, அதை யாரிடம் விற்க கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா ?என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

என்னமா பிளான் பண்ணி பண்றாங்கய்யா.. ராகவேந்திரர் கோவிலில் 1 லட்சம் கொள்ளை.. மாட்டாமல் இருக்க சிசிடிவியும் அபேஸ்!

குறிப்பாக கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெறலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் பல்வேறு பரபரப்பான தகவல் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி