ஆப்நகரம்

தடையை மீறி பாரியூர் கோயிலில் பூக்குண்டம்… குட்டு வைத்த போலீசார்!

கோபி அருகே உள்ள பாரியூர் அம்மன் கோயிலில் கொரோனா தடையை மீறி இந்து முன்னணியினர் பூக்குண்டம் இறங்கியதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

Samayam Tamil 13 Jan 2022, 5:59 pm
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பிரசித்தி பெற்ற பாரியூர் அம்மன் திருக்கோயிலில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தேர்திருவிழா மற்றும் குண்டம் இறங்கும் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பகதர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம்.
Samayam Tamil hindu munnani


கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தேர்த்திருவிழா மற்றும் குண்டம் இறங்கும் நிகழ்வில் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சாமி தரிசனத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு குண்டம் இறங்க அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பின் படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருக்கோயில் அறங்காவலர்கள் மற்றும் கோவில் வம்சாவளியினர் மட்டுமே குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் அடிப்படையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்காமல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வந்த திருக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்குமாறு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களுடன் 50க்கும் மேற்பட்ட இந்து முன்னனி தொண்டர்கள் கோவிலில் நுழைய முயன்றனர்.
ஒரே நாளில் இவ்வளவு பேருக்கு கொரோனாவா... கூடுதல் கவனம் தேவை மக்களே!

அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய போலீசார் கொரோனா விதிகளின் படி குண்டம் இறங்க அனுமதி இல்லை என்று தெரிவித்தனர்.போலீசாரின் அறிவிப்பை மீறி கோவிலுக்குள் நுழைய முயன்ற இந்து முன்னணி தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் தள்ளுமுள்ளாக மாறியதால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அடுத்த செய்தி