ஆப்நகரம்

ஈரோட்டை பந்தாடும் கொரோனா... 714 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 570 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 17 Jan 2022, 12:44 pm
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் கொரோனா 3வது அலை பெரும் பாதிப்பை உண்டாக்கும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
Samayam Tamil ஈரோட்டில் அதிகரித்த கொரோனா பாதிப்பு


அதேசமயம் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது.

ஈரோட்டுக்கு என்ட்ரி கொடுத்த ஒமைக்ரான்… உஷார் மக்களே உஷார்!

நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 416 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 542 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 570 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,10899 ஆக உயர்ந்தது. இதில் 1,07796 பேர் குணமடைந்தார்கள்.

நேற்று மட்டும் 151 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தற்போது 2 ஆயிரத்து 389 சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மொத்தம் 714 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

அடுத்த செய்தி