ஆப்நகரம்

நீதிபதிகள் நேரில் திம்பம் காடுகளை ஆய்வு செய்தார்களா? இரவு நேர போக்குவரத்து தடை குறித்து சீமான் கேள்வி!

திம்பம் மலைப் பாதையில் இரவு நேர போக்குவரத்தை தடை உத்தரவை விலக்க வேண்டும் எனவும், இத்தனை ஆண்டுகளாக விவசாயிகள் வேளாண் பொருட்களை கொண்டு செல்லும் போது எவ்வளவு புலிகள் பாதிக்கப்பட்டது என கோபிசெட்டிபாளையத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாம்தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

Samayam Tamil 11 Feb 2022, 6:46 pm

ஹைலைட்ஸ்:

  • நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்து வைத்தார்
  • தோல்வியும் வெற்றியும் எங்களுக்கு சமம்
  • நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் கைது நடக்காது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
கோபிசெட்டிபாளையத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், கோபி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,‌ மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்; வேறு கட்சிகளுடன் கூட்டணி வைப்பது நாம் தமிழர் கட்சியின் கொள்கை முடிவு அல்ல. நாங்கள் மக்களை நம்பி இயக்கத்தை துவக்கினோம். அப்படி என்றால் பெரிய கூட்டணி நாங்கள் தான்.


ஒன்றிய அரசான பாஜக, காங்கிரஸ் மற்றும் தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் எந்த காலத்திலும் கூட்டணி அமைக்க மாட்டோம். ம் தேர்தலில் நான் தோற்று போகவில்லை, மக்கள் தோற்று போகின்றனர். அதனால் எனக்கு வலி மட்டுமே. நாங்கள் வெற்றியையும், தோல்வியும் சமமாக கருதுகிறோம்.

அதனால் அதைப் பற்றி தங்களுக்கு கவலை இல்லை. வருகிற 2024 தேர்தலில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். இதுபோன்று ஏதாவது ஒரு அரசியல் கட்சிகளை கூற சொல்லுங்கள் என சவால் விடுத்தார்.

எல்லை தாண்டும் மீனவர்கள் கைது குறித்து எழுப்பிய கேள்விக்கு; நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கைது நடவடிக்கை இருக்காது. இலங்கை அரசுக்கு நாங்கள் யாரென்று தெரியும். அரசியல் சாசனத்திற்கு நாங்கள் கட்டுபடுகிறோம். அவர்களுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்துள்ளோமா என கேள்வி எழுப்பினார்.

ஹிஜாப் விவகாரத்தில் தேமுதிக நிலைப்பாடு என்ன? பிரேமலதா விளக்கம்!

தொடர்ந்து சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதித்துள்ள நீதிமன்ற உத்தரவு குறித்த கேள்விக்கு; நீதிபதிகள் நேரில் வந்து காடுகளை ஆய்வு செய்தார்களா?வழக்கு போட்டவர்கள், அதற்காக வாதித்தவர்கள் எடுத்து வைக்கின்ற கருத்துக்கு அவர்கள் தீர்ப்பு வழங்குவார்கள். அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். திம்பம் மலைப்பாதையில், இரவு நேர போக்குவரத்து தடை உத்தரவை விலக்க வேண்டும்.

இவ்வளவு ஆண்டுகளாக விவசாயிகள் வேளாண் பொருட்களை கொண்டு செல்லும் போது எவ்வளவு புலிகள் பாதிக்கப்பட்டது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அடுத்த செய்தி