ஆப்நகரம்

ஈரோடு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு... சுற்றுலா பயணி எண்டிரிக்கு தடை!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள உள்ள கொடிவேரி அணை நிரம்பிவிட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Oct 2021, 11:29 pm
கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை ஈரோடு மாவடத்தில் அமைந்துள்ள பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கண்கோட்டை, காளிங்கராயன் ஆகிய வாய்க்கால்கள் மூலம் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல், வாழை, கரும்ப, மஞ்சள் போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
Samayam Tamil ஈரோடு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு... சுற்றுலா பயணி எண்டிரிக்கு தடை!


இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக நீர் மட்டம் 102 அடியை எட்டியது.

அதனைத்தொடர்ந்து இன்று காலை அணைக்கு விநாடிக்கு 7 ஆயிரத்து நூறு கன அடி நீர் வந்து கொண்டிருப்பது. இதனால், விரைவில் அணை தன் முழுக்கொள்ளளவை எட்டும் நிலையில், அணையிலிருந்து பவானி ஆற்றின் வழியாக வெளியேற்றப்படும் உபரி தண்ணீர் 7 ஆயிரம் கன அடியாக உள்ளது.

இப்பகுதியில் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக கொடிவேரி அணைக்கு ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து குளித்து மகிழ்ந்து பரிசல் பயணம் செய்வர்.

4 வயது சிறுத்தையை வையலண்டாக கொன்றுவிட்டு, சைலண்டாக தப்பித்த... ஈரோடு சம்பவம்!
இந்த நிலையில் சுற்றுலா தளமான கொடிவேரி தடுப்பணையில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு தடுப்பணை முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. தண்ணீர் வரத்து அதிகம் இருப்பதால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை செய்யப்பட்டு உள்ளது.

உபரி நீர் திறப்பும் அதிகமிருக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி 4 ஆவது நாளாக குளிப்பதற்கு தடை செய்யப்பட்டு உள்ளது.

இதனை அறியாமல் கொடிவேரி அணைக்கு சுற்றுலா வந்த பயணிகள் அணையில் குளிப்பதற்கு தடை செய்யப் பட்டிருந்ததால் இன்று ஏமாற்றதுடன் திரும்பி சென்றனர்.

அடுத்த செய்தி