ஆப்நகரம்

ஈரோட்டில் வட மாநில பெண் தூக்கிட்டு தற்கொலை; ஆர்டிஓ தீவிர விசாரணை..!

ஈரோட்டில் வீட்டில் யாரும் இல்லாத போது வடமாநில பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 10 May 2023, 5:43 pm

ஹைலைட்ஸ்:

  • ஈரோட்டி வடமாநில பெண் தற்கொலை
  • பிண்ணனி குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை
  • சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ஈரோட்டில் வட மாநில பெண் தூக்கிட்டு தற்கொலை;
ஈரோட்டில் வீட்டில் யாரும் இல்லாத போது வடமாநில பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்ற பழமொழிக்கு ஏற்ற வகையில், தமிழ்நாட்டின் முக்கிய தொழிற்சாலை நகரங்களாக விளங்கும் ஈரோடு, திருப்பூர், கோவை,போன்ற முக்கிய மாவட்டங்களில் ஒடிசா, பீகார், சத்தீஸ்கர் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்களின் குடும்பத்துடன் தொழிற்சாலைகளில் தங்கியும், தனியாக வீடு வாடகைக்கு எடுத்தும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு அரசால் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரோட்டில் வட மாநில பெண் தூக்கிட்டு தற்கொலை:

அந்தவகையில் ஒடிசா மாநிலம், மதுபூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் பெகரா. இவரது மனைவி நர்மதா பெகரா (30). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, 10 மாத ஆண் குழந்தை உள்ளது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவர் ரஞ்சித் பெகரா மற்றும் இவரது தாயார் ஜீனுராணி, தங்கை பங்கஜனி பெகரா ஆகியோர் ஈங்கூர் எல்.ஐ.சி. காலனி, சக்திநகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இதனிடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒடிசாவில் இருந்து மனைவி நர்மதா பெகரா தனது கைக்குழந்தையுடன் வந்து கணவர் ரஞ்சித் பெகரா மற்றும் மாமியாருடன் வசித்து வந்துள்ளார்.


நடந்தது என்ன?

இந்நிலையில் சம்பவத்தன்று அனைவரும் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் நர்மதா பெகரா தனது குழந்தையை பார்த்துக்கொண்டு வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் வெளியே சென்றிருந்த கணவர் ரஞ்சித் மதியம் வீட்டிற்கு வந்த போது மனைவி நர்மதா பெகரா இரும்பு கம்பியில் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருந்தார்.

அமைச்சரவை மாற்றம்-செம அப்செட்டில் பூண்டி கலைவாணன்.. கலைந்தது கனவு!

மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே நர்மதா பெகரா உயிரிழப்பு:

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியோடு அவரை மீட்டு ஈங்கூர் தனியார் மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே நர்மதா பெகரா இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் 40 கோடி மோசடி.. 2 காவலர்கள் தலைமறைவு.. மொத்த குடும்பமும் கைது!

பல்வேறு கோணங்களில் சென்னிமலை போலீசார் விசாரணை:

இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து, குடும்ப தகராறு காரணமாக அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதோடு, ஈரோடு ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகின்றது. ஈரோட்டில் வீட்டில் யாரும் இல்லாதபோது வட மாநில பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி