ஆப்நகரம்

பானிபூரி சாப்பிட்டா சாவு: திருப்பூர் அதிகாரிகள் அதைத் தடுக்க கங்கணம்!

பானிபூரி சாப்பிட்ட பெண் பலியான சம்பவத்தை தொடர்ந்து திருப்பூரில் பானிபூரி கடைகளில் அலுவலர்கள் சோதனை நடத்தி வியாபாரிகளை எச்சரித்து வருகின்றனர்.

Samayam Tamil 27 Sep 2021, 11:09 pm
சாலையோர கடையில் இருந்து வாங்கி வந்த பானிப்பூரியை சாப்பிட்ட பெண் ஒருவர் ஈரோட்டில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையில் அலுவலர்கள் நகரில் உள்ள பானிபூரி கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
Samayam Tamil பானிபூரி சாப்பிட்டா சாவு: திருப்பூர் அதிகாரிகள் அதைத் தடுக்க கங்கணம்!


ஈரோடு நகரம் என்.ஜி.ஜி.ஓ. காலனி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம், இவரது மகள் ரோகிணிதேவி(34). பட்டதாரி. இரு சகோதரர்கள் உள்ளனர்.

ரோகிணி தேவிக்கு அவரது சகோதரர் பானிபூரி வாங்கி கொடுத்த நிலையில் அதை சாப்பிட்டவர் வாந்தி ஏற்பட்டு, பின்பு சோர்வடைந்து மறுநாள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் காரணம்க, திருப்பூரில் உள்ள தள்ளுவண்டி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர். திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் விஜய லலிதாம்பிகை தலமையிலான அதிகாரிகள் நகரில் உள்ள பல்லடம் சாலை, தாராபுரம் சாலை, தென்னம் பாளையம் சந்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பானிபுரி கடைகள், தள்ளுவண்டி பானிபூரி கடைகளில் சோதனை செய்தனர். மேலும் சுகாதாரமற்ற முறையிலிருந்த கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீசும் அவர்கள் வழங்கியுள்ளனர்.

செல்ஃபி எடுக்க வேற இடம் கிடைக்கலயா..? இளைஞருக்கு நேர்ந்த கதியை பாருங்க!
மேலும் பானிபூரி கடைகளில் பணி‌ செய்வோர் தங்களது கைகளை சுத்தமாகவும், சாப்பிடும் தட்டுகள் தூய நீரில் கழுவவும், பானிபூரி தயாரிப்பு தேதி உள்ளிட்டவை உணவு தர கட்டுப்பாட்டின் படி விற்பனை செய்யவும் அக்கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பானிபூரி சாப்பிட்டு இளம்பெண் பலியான சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், உணவு பாதுகாப்பு துறையினர் திருப்பூரில் பார்க்கும் இடமெல்லாம் சாலைகளில் காணும்‌ பானிபூரி கடைகளை முறைப்படுத்தி தொடர் சோதனைகளை நடத்தி சுகாதாரமற்ற முறையில் இருக்கும் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

அடுத்த செய்தி