ஆப்நகரம்

ஈரோட்டில் புலி, யானைப் பற்கள் பல லட்ச மதிப்பில் பறிமுதல்: கள்ளச் சந்தை அதிர்ச்சி செய்தி!

ஈரோடு மாவட்டத்தில் பல லட்சம் மதிப்பிலான புலி மற்றும் யானை பற்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இரு மாநில வனத் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Samayam Tamil 19 Oct 2021, 9:26 pm
வன விலங்குகளின் உடல் பாகங்கள் கள்ளச் சந்தையில் பல லட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்படுவதால், சட்ட விரோதமாக வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல் தற்போது நவீன‌ உத்திகளை கையாண்டு வேட்டையாடி அதன் பாகங்களை எடுத்து விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.
Samayam Tamil ஈரோட்டில் புலி, யானைப் பற்கள் பல லட்ச மதிப்பில் பறிமுதல்: கள்ளச் சந்தை அதிர்ச்சி செய்தி!


இந்த சூழலில், ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகளு க்கு வன விலங்குகளின் பற்கள் உள்ளிட்ட பாகங்களை நபர் ஒருவர் பதுக்கி விற்பனைக்காக வைத்திருப்பதாக ரகசிய தகவல் ஒன்று வனத் துறையினருக்கு கிடைத்தது.

இதன் அடிப்படையில் ஹாசனூர் வனக் கோட்ட துணை இயக்குநர் தேவேந்திர குமார் மீனா அவர்களின் உத்தரவின் படி, தாளவாடி வனச்சரக அலுவலர் சு சதீஷ் மற்றும் குழுவினரும், கர்நாடக வனத்துறை புளிஞ்சியூர் வனச்சரக அலுவலர் காந்தராஜ் , கே குடி வனச்சரக அலுவலர் சாந்தப்பா மற்றும் குழுவினரும் இணைந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் பூதிபடுகை கிராமத்தைச் சேர்ந்த ரங்கசாமி(48) என்பவரின் வீட்டை சோதனை செய்தனர்.

4 வயது சிறுத்தையை வையலண்டாக கொன்றுவிட்டு, சைலண்டாக தப்பித்த... ஈரோடு சம்பவம்!
அப்போது அவரது வீட்டில் ஏராளமான புலிப் பற்கள், யானைப் பற்கள், யானைத் தந்தங்கள், மான் கொம்புகள், வெடி மருந்துகள், சுருக்கு கண்ணிகள், சந்தனக் கட்டைகள், நாட்டுத் துப்பாக்கி பாகங்கள், நாட்டு வெடிகள், அரிவால்கள், கஞ்சா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை அடுத்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் கே.குடி வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே வனத் துறையினர் வருவதை அறிந்து தப்பியோடிய ரங்கசாமியை இரு மாநில வனத் துறையினரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமப்பகுதியில் உள்ள வீட்டில் இருந்து ஏராளமான புலி பற்கள் கைப்பற்றப் பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி