ஆப்நகரம்

நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய வீரர்களை கொன்றதா சீன ராணுவம்?

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய வீரர்களை கொன்று குவித்ததாக சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவல் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.

Samayam Tamil 24 Jun 2020, 10:26 pm
இந்திய -சீன எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில், சீன ராணுவத்துடன் அண்மையில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். உலகையே அதிர்ச்சியடைய வைத்த இக்கொடூர சம்பவத்தையடுத்து, இதுதொடர்பாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
Samayam Tamil army


"காஷ்மீர் தி நியூஸ்" என்ற பெயரிலான ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் ஒன்றில், கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினர் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்களை கொன்று குவித்துள்ளதை போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அகிலேஷ் கான் என்பவர், இந்தப் புகைப்படத்தை தமது ஃபேஸ்புக் பகிர்ந்துள்ளார். இதுபோன்று எவ்வளவு இந்திய வீரர்களை சீன ராணுவம் கொன்று குவித்துள்ளதோ?

FAKE ALERT: 2015 photo from Nigeria shared as bodies of Indian soldiers killed in Galwan clash

தெரு சண்டையில் மோதிக் கொள்வதை போன்று நம் வீரர்களை சீன ராணுவம் கொன்று குவித்துள்ளது. ஆனால், மத்திய பாஜக அரசு, மதத்தின் பெயரால் நாட்டு மக்களின் மூளையை மழுங்கடித்து, அவர்களை ஏமாற்றி வருகின்றனர் என்றும் அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பொங்கியுள்ளார்.

சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் உண்மையில் மொத்தம் எத்தனை பேர் என்பதை, மோடி தலைமையிலான மத்திய அரசு சொல்லாமல் மறைக்கிறதா என்பன போன்ற கேள்விகளை மக்கள் மத்தியில் இந்தப் பதிவு எழுப்பியுள்ளது.

கொரோனா வைரஸா, பாக்டீரியா தொற்றா? - கிளம்பியது புதிய சர்ச்சை!

இதையடுத்து, இப்பதிவின் நம்பகத்தன்மை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில், இந்திய -சீன ராணுவ வீரர்களுக்கு இடையேயான மோதல் சம்பவத்தை மையமாக வைத்து, சமூக வலைதளங்களில் வலம் வந்துக் கொண்டிருக்கும் புகைப்படம் உண்மையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நைஜீரியாவில் எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்தது.

நைஜீரிய நாட்டு ராணுவ வீரர்கள் 105 பேரை, "போகோ ஹராம்" பயங்கரவாத அமைப்பினர் கொன்று குவித்த புகைப்படம் இது என்பதும், டைம்ஸ் ஆய்வில் தெரிய வந்தது. இதுகுறித்து 2015 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதும் ஆய்வில் கண்டறியப்பட்டது.

அடுத்த செய்தி