ஆப்நகரம்

Fact Check: உண்மையில் சந்திரயான் 2 விண்கலம் புகைப்படம் எடுத்துள்ளதா?

விண்வெளியில் இருந்து பூமியை சந்திரயான் விண்கலம் படம் பிடித்துள்ளதாக, சில படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது

Samayam Tamil 28 Jul 2019, 3:22 pm
சந்திரயான் 2 விண்கலம் எடுத்துள்ள புகைப்படம் என்று, சில படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உண்மையில் சந்திரயான் 2 படம்பிடித்ததா, அப்படி இல்லை என்றால் வைரலாகக்கூடிய படங்கள் யாவை என்பது குறித்த விபரங்களை இங்கு காணலாம்.
Samayam Tamil chandrayaan fake photo


கடந்த 22ம் தேதி சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஏவதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி மார்க் கடந்த 22ம் தேதி சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஏவதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி மார்க் III ராக்கெட் மூலம் சந்திரயான் 2 ஏவப்பட்டது.

இந்த நிலையில், விண்வெளியில் இருந்து பூமியை சந்திரயான் விண்கலம் படம் பிடித்துள்ளதாக, சில படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. இது அப்படியே விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்டது போல் உள்ளது. ஆனால், இதை பற்றி ஆராய்கையில், உண்மையில் இஸ்ரோ சார்பில் இதுவரையில் எந்தபடமும் வெளியாகவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

அப்படி என்றால் இப்போது வைரலாகிக் கொண்டிருக்கும் படங்கள் என்ன என்று பார்த்தோமையானால், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் எடுக்கப்பட்டது என்பது தெரியவருகிறது. மேலும், சில படங்கள் அனிமேஷன் கிராபிக்ஸ் ஆகும்.

முதல் படம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம் ஆகும். இதனை அங்கு தங்கியிருந்த விண்வெளி வீரர்கள் எடுத்துள்ளார்கள். இது குரில் தீவுப்பகுதியில் உள்ள எரிமலையில் இருந்து வெளிவரும் புகை மண்டலம் ஆகும்.

இதே போல் பல படங்கள் 5 வருடத்திற்கு முந்தைய போட்டோக்கள் ஆகும். அவற்றை உற்று நோக்கினால் அது கிராபிக்ஸ் கலந்த புகைப்படம் என்பது புரியும்.

பொதுவாக நிலவில் இருந்து பூமியைப் படம் பிடித்தால், பூமி மிகச்சிறியதாக இருக்கும். ஆனால், இப்போது வைரலாகும் புகைப்படத்தில் நிலவுக்கு மிகநெருக்கமாக பூமி உள்ளது. இது தொடர்பாக கூகுளில் தேடும் போது, அவை கிராபிக்ஸ் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி