ஆப்நகரம்

FACT CHECK: ஸ்டாலினுக்கு முடிவெட்டிய தர்மபுரி எம்.பி. செந்தில்!

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் முடி வெட்டியதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.

Samayam Tamil 24 Dec 2020, 7:11 pm
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கியுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான திமுக, தமிழகம் மீட்போம் என்ற கொள்கைப் பிரகடனத்துடன் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பிரசார பயணத்தை தொடங்கியுள்ளது.
Samayam Tamil பரவும் புகைப்படம்
பரவும் புகைப்படம்


பரவும் செய்தி

இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் முடி வெட்டியதாக புகைப்படம் ஒன்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதனை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிரும் பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

உண்மை என்ன

சமூக வலைதளங்களில் பகிரப்படும் அந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில் அந்த புகைப்படம் போலியானது என தெரிய வந்துள்ளது. மேலும், அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பதும் தெரிய வந்துள்ளது.



சரிபார்ப்பு மற்றும் வழிமுறை

சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த புகைப்படம் தொடர்பாக முக்கிய வார்த்தைகளை மற்றும் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்ததில் உண்மையான புகைப்படத்தை, தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் பதிவிட்டுள்ளார்.

அதில், “பாலக்கோடு சட்டமன்ற தொகுதி, விடியலை நோக்கி தலைவரின் குரல், பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் பகுதியில் மக்களுடன் உரையாடல்” என்று பதிவிட்டுள்ள அவர் தான் பிரசாரம் மேற்கொண்ட புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.


அந்த புகைப்படங்களில் ஒன்றான, சலூன் கடை ஒன்றில் அவர் பிரசாரம் மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை எடிட் செய்து திமுக தலைவர் ஸ்டாலின் முகத்தை இணைத்து, ஸ்டாலினுக்கு செந்தில்குமார் முடி வெட்டியதாக பரப்பி வருகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

FACT CHECK: விஜயலட்சுமி புருஷா... கடுப்பாகி கெட்ட வார்த்தையில் திட்டிய சீமான்?

முடிவு

எனவே, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் முடி வெட்டியதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் போலியானது மற்றும் உண்மைக்கு புறம்பானது.

அடுத்த செய்தி