ஆப்நகரம்

FACT CHECK: ஆம் ஆத்மி சார்பில் அபிநந்தனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி- கெஜ்ரிவால் ட்வீட்

இந்திய விமானப் படை அதிகாரி அபிநந்தனுக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில், மாநிலங்களவையில் உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் பதிவிட்ட ட்வீட் குறித்த உண்மைத் தன்மையை அறிவோம்.

Samayam Tamil 6 Mar 2019, 1:37 pm
விங் காமாண்டர் அபிநந்தன் தனது பணியை துறந்துவிட்டு வந்தால் ஆம் ஆத்மி சார்பில் மாநிலங்களவையில் அவருக்கு உறுப்பினர் பதவி வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் பதிவிட்டதாக ஃபேஸ்புக்கில் ஒரு தகவல் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது. இதுதொடர்பான உண்மை விவரங்களை இங்கே கண்டறியலாம்.
Samayam Tamil ஆம் ஆத்மிக்கு வந்தால் அபிநந்தனுக்கு லோக் சபா உறுப்பினர் பதவி


உண்மை

அரவிந்த் கெஜ்ரிவால், இதுபோன்ற ட்வீட்டை எப்போதும் பதிவிட்டது இல்லை. மேலும் குறிப்பிட்ட இந்த ட்வீட்டில் இடம்பெற்றுள்ள புகைப்படம் முற்றிலும் போலியானாது.


உண்மை கண்டறியப்பட்ட விதம்

பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் காரணங்கள் இருப்பதாக கருத்துக்கள் நிலவுகின்றன என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். அதன் காரணமாக இதுபோன்ற போலியான ட்வீட் உருவாக்கப்பட்டு, பகிரப்பட்டு வருவதாக தெரிகிறது.


மார்ச் 3, 2019 அன்று கெஜ்ரிவாலின் ட்விட்டர் டைம்லைனை ஆராய்ந்த போது, அபிநந்தனுக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி வழங்கப்படும் என எந்தவிதமான ட்வீட்டும் பதிவிடப்படவில்லை. கடைசியாக அவர் மார்ச் 2ம் தேதி ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதுவும் ஆம் ஆத்மி கட்சி தொடர்பான வீடியோவாக உள்ளது. அதை தொடர்ந்து மார்ச் 4ம் தேதி, மஹா சிவராத்திரியை முன்னிட்டு அவர் ட்வீட் பதிவிட்டுள்ளார்.


அரவிந்த் கெஜ்ரிவால், பாலகோட் தாக்குதல் குறித்து மொத்தமாக 6 ட்வீட்டுகளை பதிவிட்டுள்ளார். அது தொடர்பான தகவல்களை கீழே பார்க்கலாம்.

முடிவு

அபிநந்தன் விருப்ப ஓய்வு பெற்று வந்தால், ஆம் ஆத்மி கட்சி சார்பில் அவருக்கு மாநிலங்களவையில் உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று கெஜ்ரிவால் பதிவிட்டதாக பகிரப்பட்டு வரும் ட்விட்டர் பதிவு முற்றிலும் தவறு. அதுபோன்ற ஒரு தகவலை அவர் எப்போதும் பதிவிடவில்லை என்பது உறுதியென தெரிவிக்கிறோம்.

அடுத்த செய்தி