மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட பிஹார் மாநில சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் மாதம் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலையொட்டி, பிரசாரம் உள்ளிட்டவைகளால் அம்மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கொரோனா காலம் என்பதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டி வருகிறது.
பரவும் செய்தி
இந்த நிலையில், பிஹார் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்த உத்தரப் பிரதேச மாநில முதல்வர் ஆதித்யநாத்துக்கு கூடிய கூட்டம் என்று கூறும் புகைப்படம் ஒன்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
FACT CHECK: இளம் பெண் அருகில் உள்ளாடையுடன் நிற்பது திருமாவளவனா?
இதனை தங்களது பக்கத்தில் பகிரும் பலரும், மக்களின் மனதை கொள்ளையடித்தவர் யோகி என்று புகழாரம் சூடி வருகின்றனர். வேறு சிலரோ, கொரோனா காலத்தில் தனி மனித இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூடியது குறித்து விமர்சித்து வருகிண்றனர்.
உண்மை என்ன
சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில் அந்த புகைப்படம் போலியானது என தெரிய வந்துள்ளது.
சரிபார்ப்பு மற்றும் வழிமுறை
அந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தால் அது 2014ஆம் ஆண்டில் மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட Jana Chetana Sabha கூட்டம் என்பது தெரிய வந்துள்ளது. Truth by IBTL எனும் ட்விட்டர் பக்கத்தில் அது தொடர்பான புகைப்படம் அதே ஆண்டு பிப்ரவரி மாதம் பதிவிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை வைத்துக் கொண்டு பிஹார் தேர்தலில் யோகி ஆதித்யநாத்துக்கு கூடிய கூட்டம் என்று வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.
அதேபோல், DeshGujarat.com எனும் இணையதளத்தில் வெளியான செய்தியிலும் அப்புகைப்படம் இடம் பெற்றுள்ளது. மேலும், Jana Chetana Sabha கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றிய தொகுப்பு அவரது யூடியூப் பக்கத்திலும் இடம் பெற்றுள்ளது.
முடிவுஎனவே, பிஹார் தேர்தலையொட்டி உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கூடிய கூட்டம் என்று என்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவரும் போலியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
தேர்தலையொட்டி, பிரசாரம் உள்ளிட்டவைகளால் அம்மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கொரோனா காலம் என்பதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டி வருகிறது.
பரவும் செய்தி
இந்த நிலையில், பிஹார் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்த உத்தரப் பிரதேச மாநில முதல்வர் ஆதித்யநாத்துக்கு கூடிய கூட்டம் என்று கூறும் புகைப்படம் ஒன்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இதனை தங்களது பக்கத்தில் பகிரும் பலரும், மக்களின் மனதை கொள்ளையடித்தவர் யோகி என்று புகழாரம் சூடி வருகின்றனர். வேறு சிலரோ, கொரோனா காலத்தில் தனி மனித இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூடியது குறித்து விமர்சித்து வருகிண்றனர்.
உண்மை என்ன
சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில் அந்த புகைப்படம் போலியானது என தெரிய வந்துள்ளது.
சரிபார்ப்பு மற்றும் வழிமுறை
அந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தால் அது 2014ஆம் ஆண்டில் மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட Jana Chetana Sabha கூட்டம் என்பது தெரிய வந்துள்ளது. Truth by IBTL எனும் ட்விட்டர் பக்கத்தில் அது தொடர்பான புகைப்படம் அதே ஆண்டு பிப்ரவரி மாதம் பதிவிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை வைத்துக் கொண்டு பிஹார் தேர்தலில் யோகி ஆதித்யநாத்துக்கு கூடிய கூட்டம் என்று வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.
அதேபோல், DeshGujarat.com எனும் இணையதளத்தில் வெளியான செய்தியிலும் அப்புகைப்படம் இடம் பெற்றுள்ளது. மேலும், Jana Chetana Sabha கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றிய தொகுப்பு அவரது யூடியூப் பக்கத்திலும் இடம் பெற்றுள்ளது.
முடிவுஎனவே, பிஹார் தேர்தலையொட்டி உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கூடிய கூட்டம் என்று என்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவரும் போலியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.