ஆப்நகரம்

FAKE ALERT: பெண்ணை கொடுமை செய்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றிய புகுந்த வீட்டார்..!

இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, அவருடைய புகுந்த வீட்டார் கொடுமை செய்து வலுகட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றிவிட்டதாகக் கூறி வெளியானச் செய்தி வைரலானது. அது குறித்த உண்மை நிலவரத்தை அறியலாம்

Samayam Tamil 11 Jul 2019, 10:20 pm
votergiri.com என்ற வலைதளத்தில், “இந்து மதம் கோமியத்தை அருந்தச் சொல்வதாலும், தீண்டாமையை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுவதாலும், இஸ்லாம் மதத்தை ஒரு பெண் தழுவி விட்டார்” என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டு இருந்தது.
Samayam Tamil பெண்ணை இஸ்லாம் மதத்திற்கு மாற்றிய விவகாரத்தில் புகுந்த வீட்டார் மீது புகார்
பெண்ணை இஸ்லாம் மதத்திற்கு மாற்றிய விவகாரத்தில் புகுந்த வீட்டார் மீது புகார்


மேலும், அந்த செய்தியில் இஸ்லாம் மதத்தை தழுவிய அந்த பெண் தன்னுடைய பெயரை மரியம் என்று மாற்றிக்கொண்டு விட்டதாகவும், பெண்களுக்கு இஸ்லாம் தான் மிகவும் பாதுகாப்பான மதம் என்று கூறியதாகவும், கூடுதல் தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

இதனுடன், இஸ்லாம் குறித்து நன்கு படிப்பினை உருவாகியுள்ளது. உலகிலேயே அமைதியை விரும்பும் மதமாகவும் திகழ்கிறது. துரதிருஷ்டவசமாக, இந்த மதத்தின் பெயர் தீவிரவாதத்துடன் தொடர்புப்படுத்தப்படுகிறது. ஆனால் இஸ்லாம் மதம் யாரையும் கொல்லக்கூடாது, சிதரவதை செய்யக்கூடாது என்று மரியம் வலியுறுத்துவதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா வாசகர் ஒருவர், votergiri.com-ல் வெளியான இந்த செய்தியை டைம்ஸ் ஃபேக்ட் செக் குழுவுக்கு சொந்தமான 8527001433 என்கிற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பினார். அதை தொடர்ந்து இந்த செய்தி தொடர்பாக உண்மையை கண்டறியும் பணியில் நாங்கள் இறங்கினோம்.

உண்மை

அதன்படி, votergiri.com-ல் வெளியான இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள பெண்ணின் பெயர் ஜெயா பண்டாரி. அவருடைய கணவரின் வீட்டார், அப்பெண்ணை இஸ்லாம் மதத்திற்கு வலுகட்டாயமாக மாற்றியுள்ளனர். 2015ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து, அவர் வசித்து வந்த ராஞ்சி பகுதி காவல் நிலையத்தில் ஜெயா பண்டாரி புகாரும் அளித்துள்ளார்.

ஆய்வு முறைகள்

ரிவெர்ஸ்-இமேஜ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கூகுளில் இந்த தகவல் குறித்து தேடினோம். அப்போது dredpic.pw என்ற இணையதளம் கிடைத்தது. அதில், இந்து மதத்தைச் சேர்ந்த பெண் இஸ்லாம் மதத்திற்கு அவருடைய கணவரின் குடும்பத்தாரால் மாற்றப்பட்டார் என்ற செய்தி குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதன் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களை வைத்து, “Hindu, Hindu woman, Muslim, in-laws, forced conversion in India,” போன்ற கீவேர்ட்சுகளை வைத்து இந்த சம்பவம் குறித்து இணையதளத்தில் தேடுதல் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வை ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடக நிறுவனமும் செய்தியாக பதிவு செய்துள்ளது.

அதில், விவகாரத்து பெற்ற பெண் ஜெயா பந்தாரி, தன்னுடைய இரண்டாவது கணவரின் வீட்டாரால் வலுகட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், அந்த குடும்பத்தினரால் அவர் இறைச்சியை சாப்பிடச் சொல்லி கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். இதே செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனமும் வெளியிட்டுள்ளது.

முடிவு

டைம்ஸ் ஃபேக்ட் செக் குழுவின் ஆய்வுபடி, இந்த பெண் தானாக முன்வந்து இஸ்லாம் மதத்தை தழுவவில்லை என்று தெரிகிறது. அவர் தன்னுடைய கணவர் வீட்டாரால் இஸ்லாம் மதத்தை வலுகட்டாயமாக தழுவ வைக்கப்பட்டார் என்பதும் தெரிய வருகிறது.

அடுத்த செய்தி