ஆப்நகரம்

FAKE ALERT: ஆமா... பிரியங்கா காந்தி போஸ்ட் பண்ணது எல்லாம் ஓல்ட் போட்டோவா?

வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் தொடர்பாக பிரியங்கா காந்தி பழைய படங்களை பதிவிட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இதன் உண்மை குறித்து ஆராயலாம்.

Samayam Tamil 20 Jul 2020, 2:54 pm
அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டரில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது, பீகார், அசாம், உத்தரப் பிரதேச மாநிலங்களில் வெள்ளத்தால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இயல்பு வாழ்க்கை அடியோடு புரட்டி போடப்பட்டுள்ளது.
Samayam Tamil Priyanka Gandhi


உதவிக்காக கையேந்தி நிற்கின்றனர். இவர்களுக்கு நாம் உதவிக்கரம் நீட்டுவது அவசியம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் தங்களால் முடிந்த உதவிகளை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

குற்றச்சாட்டு என்ன?

இந்தப் பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் தண்ணீரில் மூழ்கிய வீடுகளும், தத்தளிக்கும் மக்களும் காணப்படுகின்றனர். அதாவது தற்போதைய வெள்ள பாதிப்புகள் தொடர்பான புகைப்படங்களை பதிவிடாமல் பழைய புகைப்படங்களை எடுத்து பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விகாஸ் துபே என்கவுன்டர் செய்தி கேட்டு அதிர்ச்சியில் அவரது தந்தை மரணம்?

உண்மை என்ன?

இரண்டு புகைப்படங்களுமே பழையன. தற்போதைய பீகார், அசாம், உத்தரப் பிரதேச மாநில வெள்ளப் பெருக்குடன் தொடர்புடையது அல்ல.

எப்படி சரிபார்க்கப்பட்டது?

அதாவது சம்பந்தப்பட்ட புகைப்படங்களை கூகுளில் பதிவேற்றி தேடிப் பார்த்தோம். இதன்மூலம் முதலாவது புகைப்படம் ஜூலை 2, 2019ல் ஒன் இந்தியாவில் வெளியான செய்தியில் இடம்பெற்றுள்ளது தெரியவந்தது. இதற்கு “பீகார்-அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 174ஆக உயர்வு” என தலைப்பிடப்பட்டு உள்ளது. இந்த புகைப்படம் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் இரண்டாவது புகைப்படத்தை கூகுளில் தேடிப் பார்க்கையில் இந்துஸ்தான் டைம்ஸ் இணையதளத்தில் ஆகஸ்ட் 31, 2017ல் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதன் தலைப்பு ”இந்தியா, நேபாளம், வங்கதேசத்திற்கு வெள்ள நிவாரணமாக ஒரு மில்லியன் டாலர் வழங்குவதாக கூகுள் அறிவிப்பு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படமும் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து மனிதர்களால் பரப்பப்பட்டதா கொரோனா? - விஞ்ஞானி கூறியது உண்மையா?

முடிவு:

டைம்ஸ் பேக்ட் செக்-கின் மூலம் பிரியங்கா காந்தி தனது ட்விட்டரில் பழைய புகைப்படங்களை பதிவிட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தற்போதைய அசாம், பீகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுடன் தொடர்புடையது அல்ல.

அடுத்த செய்தி