ஆப்நகரம்

FACT CHECK: விபூதியால் வரும் ஓட்டே தேவையில்லை; கெத்து காட்டிய தளபதி - சர்ச்சை ட்வீட் உண்மையா?

ஸ்டாலின் விபூதி விவகாரத்தில் திமுக நிர்வாகி பிரசன்னா பதிவிட்டதாக கூறப்படும் ட்வீட்டின் உண்மைத் தன்மை குறித்து இங்கே காணலாம்.

Samayam Tamil 5 Nov 2020, 11:06 am
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது தேவர் நினைவிடத்தில் வழங்கப்பட்ட திருநீறை ஸ்டாலின் கீழே கொட்டிவிட்டார் என்று கூறி சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதுதொடர்பான படத்தை திமுக நிர்வாகி தமிழன் பிரசன்னா ஷேர் செய்து, அதில் விபூதி பூசினால் தான் ஓட்டு விழும் என்றால் அப்படி விழும் ஓட்டு தேவையில்லை என்று குறிப்பிட்டதாக ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது. இதனை பலரும் ஷேர் செய்ததால் சர்ச்சை வெடித்தது. இதில் கெத்து என்பதற்கு பதிலாக கொத்து என்று எழுத்துப் பிழை இருப்பதால் சந்தேகம் வலுத்தது.
Samayam Tamil Tamilan Prasanna


உண்மை என்ன?


அப்படியொரு ட்வீட்டை தமிழன் பிரசன்னா பதிவிடவில்லை. ஏற்கனவே வைரலாகும் ட்வீட்டின் ஸ்கீர் ஷாட்டை பதிவிட்டு, பிரசன்னா அதிலிருக்கும் பிழைக்கு திருத்தத்தைக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்

தமிழன் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில், ஃபோட்டோ ஷாப்க்கு‌ பிறந்த சங்கிகளுக்கு, அது கொத்து இல்ல "கெத்து". ஃபோட்டோ ஷாப்பையாவது ஒழுங்கா பண்ணுங்கடா மூதேவிங்களா என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் சர்ச்சைக்குரிய ட்வீட்டை பிரசன்னா பதிவிடவில்லை என்று தெரிகிறது. அதேசமயம் பிரசன்னா அந்த ட்வீட்டை பதிவிட்டு உடனே நீக்கிவிட்டார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

FACT CHECK: தாழ்ந்த சாதியில் பிறந்ததால் முத்துராமலிங்க தேவரை அவமதித்தாரா ஹெச்.ராஜா?

இதுபற்றி நேரடியாக விளக்கம் அளித்த தமிழன் பிரசன்னா, தான் அந்தப் பதிவை போடவில்லை. போலியாக ஒரு ட்வீட்டை பரப்பி வருகின்றனர். நான் பதிவை போடவும் இல்லை. அழிக்கவும் இல்லை என்று தெரிவித்தார்.

முடிவு

மேற்கூறிய ஆதாரங்களின் அடிப்படையில் திமுக நிர்வாகி பிரசன்னா விபூதி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய ட்வீட் எதையும் பதிவிடவில்லை என்று தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி