உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதி உறுப்பினராக பிரதமர் மோடி இருக்கிறார். இவர் காசி விஸ்வநாத் நடைபாதை திட்டம் என்ற பெயரில் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இது பிரதமரின் கனவு திட்டமாகும். இதற்கான பணிகள் முழுமை பெற்ற பிறகு எப்படி இருக்கும் என்பதை உணர்த்தும் மாதிரி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அது சுற்றிலும் நீல நிற கடல் சூழ்ந்து கிளைகள் விரித்திருப்பது போன்று காணப்படுகிறது. பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த புகைப்படத்தை பதிவிட்டு கங்கை நதிக்கரையில் பனாரஸின் அழகிய காட்சியை கண்டு ரசியுங்கள். இது மோடியின் கடின உழைப்பிற்கு கிடைக்கப் போகும் பரிசாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
இந்த புகைப்படம் வாரணாசியின் விரிவாக்கத் திட்டப் பணிகளுக்கானது அல்ல.
ஆதாரம்
துபாய் அருகேவுள்ள பாம் ஜுமைரா என்ற செயற்கைத் தீவின் புகைப்படத்தைத் தான் அப்படியே எடுத்து, வாரணாசி தொகுதியில் விரிவாக்கம் செய்யப்படவுள்ள திட்டம் என்று தவறாக குறிப்பிட்டுள்ளனர். பாம் ஜுமைரா தீவின் புகைப்படம் மற்றும் வீடியோவை பார்த்தால் தெளிவாகத் தெரிந்துவிடும். இதன் மேற்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை எடுத்து பெயர் மாற்றி காசி விஸ்வநாத் நடைபாதை திட்டம் என்று பதிவிட்டுள்ளனர்.
முடிவு
துபாய் தீவின் புகைப்படத்தை தவறாக குறிப்பிட்டு வாரணாசியின் வருங்கால திட்டம் எனப் பதிவிட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அது சுற்றிலும் நீல நிற கடல் சூழ்ந்து கிளைகள் விரித்திருப்பது போன்று காணப்படுகிறது. பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த புகைப்படத்தை பதிவிட்டு கங்கை நதிக்கரையில் பனாரஸின் அழகிய காட்சியை கண்டு ரசியுங்கள். இது மோடியின் கடின உழைப்பிற்கு கிடைக்கப் போகும் பரிசாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
இந்த புகைப்படம் வாரணாசியின் விரிவாக்கத் திட்டப் பணிகளுக்கானது அல்ல.
ஆதாரம்
துபாய் அருகேவுள்ள பாம் ஜுமைரா என்ற செயற்கைத் தீவின் புகைப்படத்தைத் தான் அப்படியே எடுத்து, வாரணாசி தொகுதியில் விரிவாக்கம் செய்யப்படவுள்ள திட்டம் என்று தவறாக குறிப்பிட்டுள்ளனர். பாம் ஜுமைரா தீவின் புகைப்படம் மற்றும் வீடியோவை பார்த்தால் தெளிவாகத் தெரிந்துவிடும். இதன் மேற்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை எடுத்து பெயர் மாற்றி காசி விஸ்வநாத் நடைபாதை திட்டம் என்று பதிவிட்டுள்ளனர்.
முடிவு
துபாய் தீவின் புகைப்படத்தை தவறாக குறிப்பிட்டு வாரணாசியின் வருங்கால திட்டம் எனப் பதிவிட்டிருப்பது தெரியவந்துள்ளது.