ஆப்நகரம்

FACT CHECK: ரயில்வே ஊழியர்கள் சம்பளத்தில் கைவைக்கிறதா நிர்வாகம்; உண்மை என்ன?

இந்திய ரயில்வே விரைவில் எடுக்கப் போகும் அதிரடியான நடவடிக்கை குறித்து பரவி வரும் தகவலின் உண்மைத் தன்மை குறித்து இங்கே காணலாம்.

Samayam Tamil 28 Nov 2020, 2:44 pm
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக ரயில்வே திகழ்ந்து வருகிறது. இதில் பணியாற்றும் 13 லட்சம் ஊழியர்களின் ஓவர் டைமை குறைக்கவும், பயணப்படியை 50 சதவீதம் குறைக்கவும் ரயில்வே ஆணையம் திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய ரயில்வே துறை அமைச்சகம் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.
Samayam Tamil Indian Railways


உண்மை என்ன?

பயணப்படி மற்றும் ஓவர் டைமை குறைக்கும் திட்டம் எதுவும் ரயில்வே நிர்வாகத்திடம் இல்லை என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

FACT CHECK: இளம் வயதில் யோகா செய்யும் பிரதமர் மோடி

ஆதாரம்

இதுதொடர்பாக PIB FACT CHECK-ன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதாவது ரயில்வே ஊழியர்களின் ஓவர் டைமை குறைக்கவும், பயணப்படியை பாதியாக குறைக்கவும் இந்திய ரயில்வே எந்தவொரு திட்டமும் வைத்திருக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

முடிவு

வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஓவர் டைம், பயணப்படி ஆகியவற்றில் இந்திய ரயில்வே எடுத்துள்ளதாக பகிரப்படும் தகவல் உண்மையில்லை. இதனை யாரும் பகிர வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி