ஆப்நகரம்

ரபேல் விமானம் பைபிள் ஓதி விமானப்படையில் சேர்க்கப்பட்டதா? உண்மை என்ன?

வெளியுறவு அமைச்சர் மற்றும் பிரதமர் முன்னிலையில் ரஃபேல் விமானங்களை விமானப்படையில் பிரதிஷ்டை செய்த ஜெப கானொலியா இது?

Samayam Tamil 12 Sep 2020, 10:15 pm
பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்திய நாட்டுக்காக வாங்கியிருந்த ரபேல் போர் விமானங்களில் முதல் கட்டமாக 5 விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்தன. இவை அதிகாரப்பூர்வமாக இந்திய படையில் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தப் போர் விமானங்கள் பைபிள் வாசித்து இந்திய ராணுவப் படையில் சேர்க்கப்பட்டன என்று ஒரு பதிவு சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இது உண்மைதானா? பார்க்கலாம்
Samayam Tamil fact check on fake news regarding rafale attachment with bible
ரபேல் விமானம் பைபிள் ஓதி விமானப்படையில் சேர்க்கப்பட்டதா? உண்மை என்ன?


பரவும் பதிவு:
பரிசுத்த வேதாகமத்தில் இருந்து வேத வசனங்களை வாசித்து வெளியுறவு அமைச்சர் மற்றும் பிரதமர் முன்னிலையில் ரஃபேல் விமானங்களை விமானப்படையில் பிரதிஷ்டை செய்த ஜெப கானொலி
இந்தியா கிறிஸ்துவை கண்டு கொள்ளும் காலம் விரைவில்.

undefined
உண்மை என்ன?

இந்த செய்தியின் உண்மைத்தன்மையை அறிய சமயம் தமிழ் உண்மையறியும் குழு களத்தில் இறங்கியது. பரவும் வீடியோவை தனித்தனி பிரேம்களாக்கி ரிவர்ஸ் இமேஜ் செய்து பார்க்கும்போது உண்மை புலப்பட்டது. அதாவது, பரவும் செய்தி உண்மைதான். பைபிள் வாசிக்கப்பட்டது. இது ரபேல் இணைக்கும் நிகழ்வுதான். ஆனால் ஜெப வழிபாட்டின் வலிமையை இந்தியா உணரும் காலம் விரைவில் வரும் என்பதைப் போன்ற நோக்கில் அந்தப் பதிவு இருந்தது. அது உண்மையல்ல.

அந்த நிகழ்வில் இந்தியாவின் சர்வமத ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் அனைத்து மதப்படியும் வழிபாடுகள் நடத்தப்பட்டன என்பதுதான் இந்தப் பதிவுக்குப் பின் இருக்கும் உண்மை.

ஆதாரத்துக்கு சில படங்களை கீழே இணைத்துள்ளோம்.





அதுபோக இந்த நிகழ்வின் முழு காணொலியையும் பார்த்த பிறகும் அதில் பிரதமர் நரேந்திரமோடியைக் காணவில்லை. இதிலிருந்து, இந்தப்பதிவில் குறிப்பிடப்பட்டபடி பிரதமர் முன்னிலையில் என்பதும் தவறான் செய்தி என்பது தற்போது உறுதியாகிறது.

முடிவு:

இது பரிசுத்த வேதாகமம் ஓதி ரபேல் இனைப்பு நடைபெற்ற நிகழ்வுதான். ஆனால், பிரதமர் முன்னிலையில் நடைபெற்றது அல்ல. மேலும், கிறித்தவ மதத்தின் மேன்மை என்றெல்லாம் பேசுவதற்கு இங்கு இடமில்லை. அனைத்து மத சடங்குகளும் நடைபெற்றன. அப்போது இந்த சடங்கும் நடைபெற்றிருக்கிறது அவ்வளவே.

நீங்களே உண்மையை அறிய விரும்பினால், ரபேல் இணைப்பு நிகழ்வின் முழு காணொலியும் இங்கு தரப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னையில் மத நல்லிணக்க நிகழ்வுகளை மதசார்பு நிகழ்வாக பரப்பிய இளைஞர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை காவல்துறை மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவின் காவல்துறையும் வைக்கும் ஒரே கோரிக்கை, தவறான தகவல்களைப் பரப்பி சமூக அமைதியைக் குலைக்க வேண்டாம் என்பதுதான். தற்போது சமயம் தமிழின் வேண்டுகோளும் அதுதான்.

அடுத்த செய்தி