ஆப்நகரம்

FACT CHECK: அரியலூரில் விபத்துக்குள்ளான விமானம் கண்டுபிடிப்பு?

அரியலூரில் விபத்துக்குள்ளான விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் குறித்து சமயம் தமிழின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.

Samayam Tamil 28 Jun 2022, 7:07 pm
அரியலூர் மாவட்டம் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் இணைப்பு பகுதியான முல்லையூர், வங்காரம், தளவாய், குழுமூர் போன்ற கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் காலை 11 மணி அளவில் ஒரு ஹெலிகாப்டர் சென்ற சத்தம் கேட்டதாகவும், அதன் பின்னர் திடீரென சுற்றியுள்ள ஒரு பத்து கிலோமீட்டர் தூரத்தில் பலமான சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
Samayam Tamil சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்
சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்


எனவே, அந்த ஹெலிகாப்டர் தான் வெடித்துச் சிதறி இருக்கும் என அப்பகுதியில் பரவலாக செய்திகள் பரவின. இந்த சம்பவம் பெரிதாகப் பேசப்பட்டதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 3 ஆம்புலன்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது போன்று எந்த சம்பவமும் அப்பகுதியில் நடைபெறாததால், அந்த ஆம்புலன்ஸ்கள் சிறிது நேரத்தில் திரும்பி சென்றதாகச் சொல்லப்படுகிறது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக வெளியாகியுள்ள தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரவும் செய்தி

இந்த நிலையில், அரியலூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் ஒன்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதில், “விபத்து ஏற்பட்ட ஹெலிகாப்டர் தீவிரமாக கண்டுபிடிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் பாரஸ்ட் காடுகளில் பகுதியில் நீண்ட நேரம் தேடி விபத்து சிக்கிய தற்போது 4.40 மணி அளவில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மீட்பு பணி தீவிரம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை உண்மை என்று நம்பி பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் அந்த தகவலை பகிர்ந்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்


உண்மை என்ன

சமூக வலைதளங்களில் பகிரப்படும் அந்த புகைப்படம், தகவலின் உண்மைத்தன்மை குறித்து சமயம் தமிழின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில் அந்த தகவல் போலியானது என்று தெரிய வந்துள்ளது. அந்த ஹெலிகாப்டர் அரியலூரில் விபத்துக்குள்ளானது அல்ல என்றும் தெரியவந்துள்ளது.

சரிபார்ப்பு வழிமுறை

சமூக வலைதளங்களில் பகிரப்படும் அந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தால் அது தொடர்பான பல செய்திகள் நமக்கு கிடைக்கின்றன. அதன்படி, சமூக வலைதளங்களில்பகிரப்பட்டு வரும் புகைப்படத்தில் இருக்கும் ஹெலிகாப்டர் விபத்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்றது.

FACT CHECK: சீனப் பெண் தூதருடன் பார்ட்டியில் கலந்து கொண்டாரா ராகுல்?
இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், “பரேலியில் இருந்து அலகாபாத் நோக்கிச் சென்ற விமானப்படைக்கு சொந்தமான ALH துருவ் ரக ஹெலிகாப்டர் உத்தரப்பிரதேச மாநிலம் சிதாபூரில் விழுந்து நொறுங்கியதில் இரண்டு அதிகாரிகள் உட்பட ஏழு இந்திய விமானப்படை வீரர்கள் உயிரிழந்தனர்.” என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

இந்த சம்பவம் தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி கூறுகையில், “குழுமூர் பகுதியில் சத்தம் கேட்டதாகக் கூறப்படுவதுபோல், எந்த நிகழ்வும் நடைபெற வில்லை” என்று தெரிவித்துள்ளார்.

முடிவுஎனவே, அரியலூரில் விபத்துக்குள்ளான விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படத்துடன் கூடிய தகவல் போலியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

அடுத்த செய்தி