ஆப்நகரம்

Fact Check: பொதுவெளியில் பிரதமர் மோடி கையில் மத அடையாளம்..?? உண்மை என்ன..?

பிரதமர் நரேந்திரமோடி மோடி இஸ்லாம் மத கொடியை கையில் பிடித்திருப்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஃபேஸ்புக்கில் இந்த புகைப்படம் பல பதிவுகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Samayam Tamil 23 Feb 2019, 1:45 pm
பிரதமர் நரேந்திரமோடி மோடி இஸ்லாம் மத கொடியை கையில் பிடித்திருப்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஃபேஸ்புக்கில் இந்த புகைப்படம் பல பதிவுகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Samayam Tamil பிரதமர் மோடி கையில் மத அடையாளம்..?? உண்மை இதுதான்..!!


ஃபேஸ்புக்கில் உள்ள “பாஷான் யா ராஷான்” என்ற பக்கத்தில் பிரதமர் மோடி இஸ்லாம் மதத்திற்கான கொடியை கையில் பிடித்திருப்பது போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. மேலும், புகைப்படத்திற்கான பதிவில், “தன்னுடைய உண்மையான நிறத்தை காட்ட பிரதமர் வந்தியிருக்கிறார். பக்தர்களே எங்காவது சென்று சாவுங்கள்” என்று பொருள் வரும் வாசகம் இந்தி மொழியில் எழுதப்பட்டுள்ளது.


உண்மை
கடந்த 2018, டிசம்பர் மாதம் அசாமில் பிரம்பபுத்திரா நதிக்கு மேலே கட்டப்பட்ட ”போகிபீல் பாலம்” திறக்கப்பட்டது. அதற்கான விழாவில் பாலத்தில் போக்குவரத்தை பிரதமர் மோடி பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா அந்த நிகழ்வை புகைப்படம் எடுத்தது.


kooகுளில் சாதாரண தேடுதல் மூலமே இந்த புகைப்படம் கிடைத்துவிடுகிறது. அதை பதிவிறக்கம் செய்த சிலர், எடிட் செய்து இணையதளங்களில் தவறான தகவல்களுடன் பதிவிட்டுள்ளனர். மேலும் போகிபீல் பாலம் திறந்துவைக்கப்பட்ட நிகழ்வு ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ உட்பட பல்வேறு ஊடகங்களில் செய்தியாகவும் வெளியிடப்பட்டுள்ளது.


தவிர, சமூகவலைதளங்களில் #BogibeelBridge அல்லது @bogibeelbridge என்பனவற்றை டைப் செய்து தேடினால், இது சம்மந்தப்பட்ட செய்தி மற்றும் புகைப்படம் எல்லாம் கிடைத்து விடுகிறது. இதே புகைப்படத்தை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமும் வெளியிட்டுள்ளது.

ஒப்பீடு
பிரதமர் மோடி குறித்த தவறான செய்தி பரவி வரும் நிலையில், இஸ்லாம் மத கொடியுடன் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் மற்றும் உண்மையான புகைப்படம் இரண்டும் இங்கே ஒப்பீட்டு முறையில் வழங்கப்பட்டுள்ளது.


முடிவு
டைம்ஸ் உண்மை கண்டறியும் குழு நடத்திய ஆய்வு மூலம், பிரதமர் மோடி இஸ்லாம் மத கொடியை பொதுநிகழ்ச்சியில் காட்டியதாக பரவி வரும் செய்தியில் உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த தகவல் முற்றிலும் தவறானது என்பதும் தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி