ஆப்நகரம்

FACT CHECK: 10 மணிக்குள் வரவில்லை என்றால் ஆசிரியர்களுக்கு சம்பளப் பிடித்தம்?

ஆசிரியர்கள் 10மணிக்குள் பள்ளிக்கு வரவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் குறித்து சமயம் தமிழின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.

Samayam Tamil 25 Jul 2022, 6:43 pm
பள்ளிகளில் ஏராளமான சீர்திருத்த நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள், முதுகலை, பட்டதாரி, உடற்கல்வி, சிறப்பு ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு முன்னரே பள்ளிக்கு வரவேண்டும் என்பன உள்ளிட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் நிர்வாக நலன்களை பாதுகாக்கும் வகையில் பள்ளிகள் பின்பற்ற வேண்டிய 77 வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கையாக நேற்று வெளியிட்டது.
Samayam Tamil ஆசிரியர்கள் வருகைப்பதிவு
ஆசிரியர்கள் வருகைப்பதிவு


பரவும் செய்தி

அதன் தொடர்ச்சியாக, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் வருகைப்பதிவை வருகிற ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் செயலி மூலம் மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகவும், இந்த செயலியில் காலை 10 மணிக்குள் ஆசிரியர்கள் தங்களது வருகையை பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும் தகவல் ஒன்று சில செய்தி சேனல்கள், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதனை உண்மை என்று நம்பி பலரும் அந்த தகவலை பகிர்ந்து வருகின்றனர்.


உண்மை என்ன

சமூக வலைதளங்களில் பகிரப்படும் அந்த தகவலின் உண்மைத்தன்மை குறித்து சமயம் தமிழின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில் அந்த தகவல் போலியானது என்று தெரிய வந்துள்ளது.

சரிபார்ப்பு வழிமுறை

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறையைத் தொடர்பு கொண்டு பேசிய போது, “ஆன்லைன் மூலம் ஆசிரியர்களின் வருகைப் பதிவை மேற்கொள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் செயலி மூலம் ஆசிரியர்கள் காலை 10 மணிக்குள் வருகையைப் பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என வெளியாகும் செய்தி உண்மை அல்ல. அப்படி ஏதும் அறிவிக்கப்படவில்லை.” என்று தெரிவித்துள்ளனர்.


அதேபோல், தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் TN DIPR Fact Check என்ற ட்விட்டர் பக்கத்திலும் இந்த தகவல் போலியானது என பதிவிட்டுள்ளனர்.
FACT CHECK: அரியலூரில் விபத்துக்குள்ளான விமானம் கண்டுபிடிப்பு?
முடிவுஎனவே, ஆசிரியர்கள் 10மணிக்குள் பள்ளிக்கு வரவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்ற தகவல் போலியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

அடுத்த செய்தி