ஆப்நகரம்

FACT CHECK: பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவர்களை கொன்ற வீரப்பெண்!

பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இருவரை கொன்ற வீரப்பெண் என்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் குறித்து சமயம் தமிழின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.

Samayam Tamil 30 Aug 2021, 1:00 pm
சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நாளுக்கு நாள் போலி செய்திகள் அதிகமாக பரவிக் கொண்டிருக்கின்றன. அப்படிப் பரவும் போலி செய்திகளை கூடுமான அளவிற்கு கண்டறிந்து உண்மையை உலகுக்கு செய்தி நிறுவனங்கள் வெளிக் கொனர்ந்து கொண்டிருக்கின்றன.
Samayam Tamil பரவும் புகைப்படம்
பரவும் புகைப்படம்


பரவும் செய்தி

இந்த நிலையில், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இருவரை கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்து விட்டனர் என்ற புகைப்படத்துடன் கூடிய தகவல் ஒன்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதனை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிரும் பலரும் கடுமையான விமர்சனங்களை காவல்துறை மீது முன்வைத்து வருகின்றனர்.

உண்மை என்ன

சமூக வலைதளங்களில் பகிரப்படும் அந்த தகவலின் உண்மைத்தன்மை குறித்து சமயம் தமிழின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில் அந்த தகவல் போலியானது என்று தெரிய வந்துள்ளது.


சரிபார்ப்பு வழிமுறை

சமூக வலைதளங்களில் பகிரப்படும் அந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தால் அது தொடர்பான பல செய்திகள் நமக்கு கிடைக்கின்றன. அதன்படி, சமூக வலைதளங்களில்பகிரப்பட்டு வரும் புகைப்படத்தில் இருக்கும் பெண்ணின் பெயர் சுபா சங்கர் நாராயணன்.

வழக்கறிஞரான அவர், தன்னுடைய காதலனை கரம் பிடிக்கும் பொருட்டு, அவருடன் கூட்டு சேர்ந்து தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட கிரிஷ் என்பவரை 2003ஆம் ஆண்டு கொலை செய்ததாக அவர் உள்பட 4 பேருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும். அது தொடர்பான மற்றொரு செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

FACT CHECK: பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிஎஸ்பிபி ஆசிரியர் ஆர்.எஸ்.பாரதியின் உறவினரா?
முடிவு

எனவே, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இருவரை கொன்ற வீரப்பெண் என்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் போலியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

அடுத்த செய்தி