ஆப்நகரம்

FACT CHECK: போராடிய விவசாயிகளை அடித்து துரத்தியதா மத்திய அரசு?

போராடும் விவசாயிகளை மத்திய அரசு கடுமையாக தாக்கியதா?

Samayam Tamil 26 Nov 2020, 9:09 pm

போராட்டம் நடத்தும் விவசாயிகளை இந்திய அரசு கடுமையாக தாக்கியதாக நான்கு படங்கள் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளன. இதன் உண்மைத்தன்மை குறித்து பார்க்கலாம்.
Samayam Tamil Pic Tweeted by Youth Congress


பதிவிடப்பட்ட செய்தி

காங்கிரஸ் இளைஞரணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், போராட்டம் நடத்தும் விவசாயிகளை மத்திய அரசு கடுமையாக தாக்கியதாக நான்கு படங்களை பதிவிட்டுள்ளது. அதில் இரண்டு படங்களில், போராட்டக்காரர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டுகின்றனர்.



உண்மை என்ன

இந்த நான்கு படங்களில் இரண்டு படங்கள் 2018ஆம் ஆண்டு விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது எடுக்கப்பட்டவை.

FACT CHECK: இந்திய மக்களுக்கு கொரோனா நிதி; அதுவும் ஆளுக்கு ரூ.1.3 லட்சமாம்?

சரிபார்ப்பு முறை

நான்கு படங்களையும் ரிவர்ஸ் இமேஜ் தேடல் மூலம் அவற்றின் மூலத்தை கண்டறிய முயற்சித்தோம். அப்போது, 2018ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதியன்று டெல்லி-உத்தரப் பிரதேச எல்லையில் நடத்திய போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட படங்கள் என்பது தெரியவந்தது.

முடிவு

காங்கிரஸ் சார்பில் பதிவிடப்பட்டிருக்கும் புகைப்படங்கள் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தை சேர்ந்தவை.

அடுத்த செய்தி