ஆப்நகரம்

FACT CHECK: திருப்பதியில் சீமான் மகனுக்கு துலாபாரம்!

திருப்பதியில் சீமான் மகனுக்கு துலாபாரம் நடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.

Samayam Tamil 17 Jan 2021, 11:06 pm
தமிழ் தேசிய அரசியல் பேசிவரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வேற்று மொழி பேசும் பிற மாநில மக்களை கடுமையாக விமர்சித்து வருபவர். தமிழ் நாடு பெரியார் மண் என்று கூட தெரியாமல் பெரியார் குறித்து பேசி கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டவர் சீமான். அதுதவிர பிற மாநில மக்களை கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான்.
Samayam Tamil பரவும் புகைப்படம்
பரவும் புகைப்படம்


பரவும் செய்தி

இந்த நிலையில், திருப்பதியில் சீமான் மகனுக்கு துலாபாரம் நடத்தப்பட்டதாக புகைப்படம் ஒன்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. இதனை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வரும் பலரும் சீமானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

“முப்பாட்டன்னு தம்பிங்க கிட்ட சொல்லிட்டு நைசா சீமான் அண்ணன் மட்டும் திருப்பதியில போய் மகனுக்கு துலாபாரம் கொடுத்தாரு பாருங்க” என்றும், அவரது கட்சியினர் தமிழர் – தெலுங்கர் என்ற வேறுபாடு பார்க்கும் நிலையில் அவர் மட்டும் திருப்பதி சென்றதாகவும் விமர்சனங்கள் அவர் மீது முன் வைக்கப்பட்டு வருகிறது.

பரவும் புகைப்படம்


உண்மை என்ன

சமூக வலைதளங்களில் பகிரப்படும் அந்த தகவலின் உண்மைத்தன்மை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில், அந்த புகைப்படத்தில் பகிரப்படும் தகவல் போலியானது என தெரிய வந்துள்ளது. மேலும், 2021ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சீமான் சென்ற புகைப்படத்தை வைத்துக் கொண்டு போலியாக திருப்பதி சென்றதாக போலியாக பரப்பப்பட்டு வருகிறது என்பதும் தெரிய வந்துள்ளது.

சரிபார்ப்பு மற்றும் வழிமுறை

சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த புகைப்படம் தொடர்பாக முக்கிய வார்த்தைகளை மற்றும் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தால் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் 2021ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி பகிர்ந்த தகவல் நமக்கு கிடைக்கிறது. அதன்படி, திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சீமான் சென்றது தெரிய வருகிறது. மேலும், திருப்பதி கோயிலில் துலாபாரம் செய்த சீமான் என்று கூறி பகிரப்படும் கருத்துகளுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் எதிர்வினையாற்றி இருப்பதும் நமக்கு தெரிய வருகிறது.


திருப்பதி


துலாபாரம்


இது தவிர, “துலாபாரம்” என்று தமிழில் எழுதப்பட்டுள்ளது. ஆந்திராவில் உள்ள திருப்பதி கோயிலில் அப்படி எழுதப்பட்டிருக்காது. இது தொடர்பாக factcrescendo எனும் உண்மை கண்டறியும் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

முடிவு

எனவே, திருப்பதியில் சீமான் மகனுக்கு துலாபாரம் நடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் போலியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அந்த புகைப்படம் அவர் திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சென்ற போது எடுத்த புகைப்படம்.

அடுத்த செய்தி