ஆப்நகரம்

FAKE ALERT: நாடு முழுவதும் அக்டோபர் வரை ஹோட்டல்கள் மூடலா?

நாடு முழுவதும் அக்டோபர் வரை ஹோட்டல்கள் மூடப்படுவதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவரும் தகவல் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.

Samayam Tamil 24 Apr 2020, 5:44 pm
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் உள்ள ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், ரிசார்ட்டுகள் அனைத்தும் வருகிற அக்டோபர் மாதம் 15ஆம் தேதி மூட்டப்படுகிறது என்ற தகவலுடன் கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இது தொடர்பான அறிவுறுத்தலை இந்திய சுற்றுலாத்துறை வழங்கியுள்ளதாக தெரிவிக்கும் அந்த கடிதத்தில் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் லோகோவும் இடம் பெற்றுள்ளது. சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் அக்கடிதம் வெளியிடப்பட்டது என்பதை குறிக்கும் வகையில் அமைச்சகத்தின் லோகோவானது அதில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதமானது வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வரும் நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.

FAKE ALERT: Letter claiming closure of hotels till October 15, 2020 not from Tourism Ministry

அதில், அந்த கடிதம் போலியானது என தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், ரிசார்ட்டுகள் அனைத்தும் வருகிற அக்டோபர் மாதம் 15ஆம் தேதி மூட்டப்படுகிறது என்ற எந்த உத்தரவையும் சுற்றுலாத்துறை அமைச்சகம் பிறப்பிக்கவில்லை.

போலி கடிதம்


இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சுற்றுலாத்துறை, அமைச்சகத்தின் பேரில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் கடிதம் போலியானது. அது மாதிரியான எந்த உத்தரவையும் அமைச்சகம் பிறப்பிக்கவில்லை. மக்கள் அதனை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளது.

கடிதத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய சொற்களின் சேர்க்கைகளைப் பயன்படுத்தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு, கூகுளில் ஸ்கேன் செய்து பார்த்தபோது, எந்த ஒரு அதிகாரப்பூர்வ ஊடகமும் இதனை வெளியிட வில்லை என தெரியவந்துள்ளது.


பி.ஐ.பி.யின் உண்மை கண்டறியும் குழுவும் இந்த கடிதத்தை போலி என தெரிவித்துள்ளதுடன், இதுபோன்றா வதந்திகளை நம்பாமல் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எனவே, நாடு முழுவதும் உள்ள ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், ரிசார்ட்டுகள் அனைத்தும் வருகிற அக்டோபர் மாதம் 15ஆம் தேதி மூட்டப்படுகிறது என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் கடிதம் போலியானது.

அடுத்த செய்தி