ஆப்நகரம்

FAKE ALERT: சிறுவர்களுக்கு சரக்கு பாட்டில் கொடுத்த பாஜக எம்.எல்.ஏ.!

எனவே, பாஜக எம்.எல்.ஏ. சிறுவர்களுக்கு மது பாட்டில் வழங்கினார் என்பது தவறு. 'பதவிக்காக சமாஜ்வாதி கட்சியில் இருந்துகொண்டு பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கும் எம்.எல்.ஏ.' சிறுவர்களுக்கு மது பாட்டில் வழங்கினார் என்பதே சரி.

Samayam Tamil 9 Jan 2019, 1:44 pm
உத்தரப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ. நிதின் அகர்வால் சிறுவர்களுக்கு மது பாட்டில் வழங்கியதாக வெளியாகியுள்ள செய்தியில் உண்மை இருக்கிறதா?
Samayam Tamil 67439904


உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் தொகுதியில் பாஜவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. நிதின் அகர்வால் சிறுவர்களுக்கு உணவுப் பொட்டலத்துடன் மது பாட்டிலையும் வழங்கினார் என பல்வேறு தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதில் எந்த அளவுக்கு உண்மையில் இருக்கிறது என்று டைம்ஸ் சோதனையில் தெரிந்தது.

உண்மையை என்ன?

நிதின் அகர்வால் மற்றும் அவரது தந்தை நரேஷ் அகர்வால் ஆகிய இருவரும் ஹர்தோயில் உள்ள சர்வான்தேவி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அன்னதானம் அளித்தனர்.

அவர்கள் வழங்கிய உணவுப் பொட்டலத்தில் பூரியுடன் மது பாட்டில் ஒன்றும் இருந்தது. சிறியவர்கள் முதல் பெயவர்கள் வரை அனைவருக்கும் உணவுப் பொட்டலத்துடன் மதுவும் வழங்கப்பட்டது. இது பற்றிய செய்திகள் பல ஊடகங்களில் வெளியாகின.
ஆனால், இதனை வழங்கியது பாஜக எம்.எல்.ஏ. நிதின் என்பதில்தான் தவறு இருக்கிறது. நிதின் சமாஜ்வாதி கட்சியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர். அவரது தந்தை நரேஷ் அகர்வால் கடந்த மார்ச் 2018ல் சமாஜ்வாதி கட்சியிலிருந்து பாஜகவுக்கு மாறினார். மாநிலங்களவைத் தேர்தலில் தன்னை எம்.பி. பதவிக்கு தேர்ந்தெடுக்காமல் நடிகையும் அமிதாப் பச்சன் மனைவியுமான ஜெயா பச்சனைத் தேர்ந்தெடுத்ததால், நரேஷ் சமாஜ்வாதி கட்சியிலிருந்து விலகி பாஜவில் ஐக்கியமானார்.
நரேஷ் தனது மகன் நிதினும் பாஜகவில் இணைந்து மாநிலங்களைவைத் தேர்தலில் பாஜகவுக்குத்தான் வாக்களிப்பார் என்று கூறினார். ஆனால், நிதின் அகர்வால் இன்னும் சமாஜ்வாதி கட்சியிலேயே உள்ளார். அவர் பாஜக எம்.எல்.ஏ. இல்லை.

உறுதி செய்வது எப்படி?

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, ஒரு எம்.எல்.ஏ. தானாக முன்வந்து கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு இன்னொரு கட்சியில் சேர்ந்தால், அவரது எம்.எல்.ஏ. பதவி தகுதிநீக்கம் செய்யப்படும். பின், அவர் பதவி வகித்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்.

அதற்கு அந்த எம்.எல்.ஏ. தனது ராஜினாமாவை சபாநாயகரிடமும் சர்ப்பிக்க வேண்டும். ஆனால், நிதின் அகர்வால் இன்னும் சமாஜ்வாதியிலிருந்து விலகதாக ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுக்கவில்லை. அப்படிச் செய்தால் அவரது பதவியே போயிருக்கும்.

எனவே தற்போது உத்தரப் பிரதேச சட்டப்பேரவையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள தகவலின்படி, நிதின் அகர்வால் சமாஜ்வாதி கட்சியின் எம்.எல்.ஏ.தான்.
இது குறித்து நிதின் அகர்வாலிடமே கேட்டபோது, அவர் தான் இன்னும் சமாஜ்வாதி கட்சியிலேயே இருப்பதாகவும் ஆனால் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

முடிவு

எனவே, பாஜக எம்.எல்.ஏ. சிறுவர்களுக்கு மது பாட்டில் வழங்கினார் என்பது தவறு. 'பதவிக்காக சமாஜ்வாதி கட்சியில் இருந்துகொண்டு பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கும் எம்.எல்.ஏ.' சிறுவர்களுக்கு மது பாட்டில் வழங்கினார் என்பதே சரி.

அடுத்த செய்தி