மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட பிஹார் மாநில சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் மாதம் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி, அம்மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
பரவும் செய்தி
இந்த நிலையில், பிஹார் தேர்தலையொட்டி பாஜக-ஜேடியு கூட்டணி வாக்காளர்களுக்கு இலவச மது விநியோகத்தில் ஈடுபடுவதாக புகைப்படம் ஒன்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதனை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிரும் பலரும் பாஜக-ஜேடியு கூட்டணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அத்துடன், இத்தகைய விஷங்களுக்கு வாக்காளர்கள் இறையாகிவிட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
உண்மை என்ன
சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த தகவலின் உண்மைத்தன்மை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில், இலவச மது விநியோகம் என்று பகிரப்பட்டு வரும் புகைப்படம் போலியானது என தெரிய வந்துள்ளது.
மேலும் அந்த புகைப்படமானது, தாய்லாந்து நாட்டின் Ubon Ratchathani மாகாணத்தில் 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது, அந்நாட்டை சேர்ந்த ஜானி என்பவர் நிவாரண பொருட்களுடன் சேர்ந்து மது பாட்டில்கள் அடங்கிய கிட்டையும் பொது மக்களுக்கு விநியோகம் செய்த புகைப்படம் என்றும் தெரிய வந்துள்ளது. அதற்கும் பிஹார் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை.
சரிபார்ப்பு மற்றும் வழிமுறை
கூகுளில் தலைகீழ் வரைபட தேடலை பயன்படுத்தி தேடினால், தாய்லாந்து நாட்டை சேர்ந்த பல கட்டுரைகளின் அதே புகைப்படம் இடம்பெற்றுள்ளதை அறிந்து கொள்ளலாம். அதன்படி, தாய்லாந்து நாட்டில் Ubon Ratchathani மாகாணத்தில் 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது தொண்டு உதவிகள் செய்து வந்த ஜானி என்பவர், மதுவுக்கு அடிமையாகியுள்ள மதுப்பிரியர்களுக்காக உதவி செய்யும் பொருட்டு நிவாரண உதவிகளுடன் சேர்த்து இலவசமாக மது பாட்டில்கள் அடங்கிய கிட்டுகளையும் விநியோகித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடிவுஎனவே, பிஹார் தேர்தலையொட்டி பாஜக-ஜேடியு கூட்டணி இலவச மது விநியோகத்தில் ஈடுபடுவதாக என்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவரும் தகவல் போலியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
பரவும் செய்தி
இந்த நிலையில், பிஹார் தேர்தலையொட்டி பாஜக-ஜேடியு கூட்டணி வாக்காளர்களுக்கு இலவச மது விநியோகத்தில் ஈடுபடுவதாக புகைப்படம் ஒன்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதனை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிரும் பலரும் பாஜக-ஜேடியு கூட்டணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அத்துடன், இத்தகைய விஷங்களுக்கு வாக்காளர்கள் இறையாகிவிட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
உண்மை என்ன
சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த தகவலின் உண்மைத்தன்மை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில், இலவச மது விநியோகம் என்று பகிரப்பட்டு வரும் புகைப்படம் போலியானது என தெரிய வந்துள்ளது.
மேலும் அந்த புகைப்படமானது, தாய்லாந்து நாட்டின் Ubon Ratchathani மாகாணத்தில் 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது, அந்நாட்டை சேர்ந்த ஜானி என்பவர் நிவாரண பொருட்களுடன் சேர்ந்து மது பாட்டில்கள் அடங்கிய கிட்டையும் பொது மக்களுக்கு விநியோகம் செய்த புகைப்படம் என்றும் தெரிய வந்துள்ளது. அதற்கும் பிஹார் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை.
சரிபார்ப்பு மற்றும் வழிமுறை
கூகுளில் தலைகீழ் வரைபட தேடலை பயன்படுத்தி தேடினால், தாய்லாந்து நாட்டை சேர்ந்த பல கட்டுரைகளின் அதே புகைப்படம் இடம்பெற்றுள்ளதை அறிந்து கொள்ளலாம். அதன்படி, தாய்லாந்து நாட்டில் Ubon Ratchathani மாகாணத்தில் 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது தொண்டு உதவிகள் செய்து வந்த ஜானி என்பவர், மதுவுக்கு அடிமையாகியுள்ள மதுப்பிரியர்களுக்காக உதவி செய்யும் பொருட்டு நிவாரண உதவிகளுடன் சேர்த்து இலவசமாக மது பாட்டில்கள் அடங்கிய கிட்டுகளையும் விநியோகித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடிவுஎனவே, பிஹார் தேர்தலையொட்டி பாஜக-ஜேடியு கூட்டணி இலவச மது விநியோகத்தில் ஈடுபடுவதாக என்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவரும் தகவல் போலியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.