கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதேசமயம், கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட முழு முடக்கம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்ததாக ஸ்க்ரீன்ஷாட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த புகைப்படத்தில், “ஜூன் மாதம் 1ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் ஆட்-ஈவன் (ஒற்றை, இரட்டை இலக்கம்) முறையில் திறக்கப்பட வேண்டும். ஒற்றை இலக்க நாட்களில் ஆசிரியர்களும், இரட்டை இலக்க நாட்களில் மாணவர்கள் வர வேண்டும்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாக உள்ளது. அது எப்படி, ஒரு நாளில் ஆசிரியரும் மற்றொரு நாளில் மாணவர்களும் வர முடியும் என்ற கேள்வி இயற்கையாக எழுவதுடன், உண்மையாகவே ராகுல் காந்தி இதனை ட்வீட் செய்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
FAKE ALERT: Rahul Gandhi did not tweet odd-even scheme for reopening schools
அத்துடன், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வரும் நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.
அதில், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு தொடர்பாக ராகுல் காந்தி ட்வீட் செய்ததாக பகிரப்பட்டு வரும் ட்விட்டர் புகைப்படம் போலியானது என தெரிய வந்துள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ட்விட்டர் புகைப்படத்தில் 2020ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்த தேதியில் எந்த ட்வீட்டும் பதிவிடப்படவில்லை.
கொரோனா பாதிப்பு, அதன் மூலம் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பாக மெய்நிகர் பத்திரிகை கூட்டம் ஒன்றை மட்டுமே ராகுல் காந்தி நடத்தியுள்ளார். அந்த உரையாடலின் போது கூட பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு பற்றி ராகுல் காந்தி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
எனவே, ராகுல் காந்தி பதிவிட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ட்வீட் போலியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
இதனிடையே, பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்ததாக ஸ்க்ரீன்ஷாட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த புகைப்படத்தில், “ஜூன் மாதம் 1ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் ஆட்-ஈவன் (ஒற்றை, இரட்டை இலக்கம்) முறையில் திறக்கப்பட வேண்டும். ஒற்றை இலக்க நாட்களில் ஆசிரியர்களும், இரட்டை இலக்க நாட்களில் மாணவர்கள் வர வேண்டும்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாக உள்ளது. அது எப்படி, ஒரு நாளில் ஆசிரியரும் மற்றொரு நாளில் மாணவர்களும் வர முடியும் என்ற கேள்வி இயற்கையாக எழுவதுடன், உண்மையாகவே ராகுல் காந்தி இதனை ட்வீட் செய்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
FAKE ALERT: Rahul Gandhi did not tweet odd-even scheme for reopening schools
அத்துடன், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வரும் நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.
அதில், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு தொடர்பாக ராகுல் காந்தி ட்வீட் செய்ததாக பகிரப்பட்டு வரும் ட்விட்டர் புகைப்படம் போலியானது என தெரிய வந்துள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ட்விட்டர் புகைப்படத்தில் 2020ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்த தேதியில் எந்த ட்வீட்டும் பதிவிடப்படவில்லை.
கொரோனா பாதிப்பு, அதன் மூலம் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பாக மெய்நிகர் பத்திரிகை கூட்டம் ஒன்றை மட்டுமே ராகுல் காந்தி நடத்தியுள்ளார். அந்த உரையாடலின் போது கூட பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு பற்றி ராகுல் காந்தி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
எனவே, ராகுல் காந்தி பதிவிட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ட்வீட் போலியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.