ஆப்நகரம்

விகாஸ் துபே என்கவுன்டர் செய்தி கேட்டு அதிர்ச்சியில் அவரது தந்தை மரணம்?

விகாஸ் துபே என்கவுன்டர் செய்தி கேட்டு அதிர்ச்சியில் அவரது தந்தை உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவரும் தகவல் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.

Samayam Tamil 16 Jul 2020, 8:33 pm
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள பிக்ரு கிராமத்தில் ரவுடி விகாஸ் துபேவை பிடிக்க சென்ற போலீசார் மீது விகாஸ் துபேவின் கூட்டாளிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேவேந்திர மிஸ்ரா உட்பட போலீசார் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil விகாஸ் துபேவின் தந்தை
விகாஸ் துபேவின் தந்தை


இதையடுத்து, மத்தியப்பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்ட விகாஸ் துபே, உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு கொண்டு வரப்படும் வழியில் போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்ற போது அவரை என்கவுன்டர் செய்து போலீசார் சுட்டுக் கொன்றனர்.

இந்த நிலையில், விகாஸ் துபே என்கவுன்டர் செய்தி கேட்டு அதிர்ச்சியில் இருந்த அவரது தந்தை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர், யூ-டியூப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பகிரப்பட்டு வரும் புகைப்படத்தில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தனது லோகோவுடன் உள்ள மைக் மூலம் அவரிடம் பேட்டி எடுப்பது போன்று உள்ளது.

FAKE ALERT: Vikas Dubey’s father alive, claim of him dying of heart-attack false

இந்த புகைப்படத்துடன் கூடிய தகவலை பல்வேறு தரப்பினரும் பகிர்ந்து வரும் நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.

சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படம்


சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படம்


அதில், விகாஸ் துபேவின் தந்தை உயிருடன் தான் இருக்கிறார் என்றும், அவரது மகன் உயிரிழப்பு விவகாரத்தில் இருந்து அவர் தேறிவிட்டார் என்றும் தெரிய வந்துள்ளது. தேடுபொறியான கூகுளில் இதுதொடர்பான முக்கிய வார்த்தைகளை (Keywords) குறிப்பிட்டு தேடியதில், ஜூலை 17ஆம் தேதியன்று பதிவிடப்பட்ட நியூஸ்18 தொலைகாட்சியின் செய்தி கிடைக்கப்பற்றுள்ளது. அதில், மாரடைப்பு ஏற்பட்டு விகாஸ் துபேவின் தந்தை உயிரிழந்ததாக பகிரப்பட்டு வரும் செய்திக்கு உத்தரப்பிரதேச மாநில போலீசார் மறுப்பு தெரிவித்ததுடன் அது போலியானது எனவும் தெரிவித்துள்ளனர்.

நியூஸ்18 செய்தி


எனவே, விகாஸ் துபேவின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என்ற செய்தியுடன் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படமானது போலியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

அடுத்த செய்தி