ஆப்நகரம்

158 இந்திய வீரர்களை சீனா கொன்றுவிட்டதா? உண்மை என்ன?

158 இந்திய வீரர்களை சீனா கொன்றுவிட்டதாக பரவிவரும் தகவல் உண்மையா என்பதை பார்க்கலாம்.

Samayam Tamil 13 Sep 2020, 5:56 pm
பரவும் தகவல்:
Samayam Tamil பகிரப்படும் படங்கள்


இந்தியா-சீனா இடையே எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்திய ராணுவத்தை சீனா தாக்கியுள்ளதாகவும், 158 இந்திய வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் ஃபேஸ்புக், வாட்சப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மூன்று படங்கள் பரவி வருகின்றன.



உண்மை:

இந்த புகைப்படங்கள் இதே பொய்யுடன் முன்பு பரப்பப்பட்டு வந்தன. இந்தியா, சீனா இடையே டொக்லாம் பகுதியில் பிரச்சினை ஏற்பட்டபோது இப்படங்கள் யூட்யூபில் வலம் வந்துள்ளன. டொக்லம் பிரச்சினையின்போது இந்திய வீரர்கள் யாரும் சீனாவால் கொல்லப்படவில்லை.

மூன்று படங்களில் ஒரு படம் மட்டும் இந்தியா, பாகிஸ்தான் இடையே ஜம்மூ காஷ்மீரில் ராஜோரி மாவட்டத்தில் நடைபெற்ற மோதலின்போது இந்திய வீரர்கள் படுகாயமாடைந்தபோது எடுக்கப்பட்டது. மற்ற இரண்டு படங்களும் சரியாக எப்போது எடுக்கப்பட்டவை என்பது தெளிவாகவில்லை.



இதுபோக, சீனாவால் தாக்குதல் நடத்தப்பட்டு 158 இந்திய வீரார்கள் படுகாயமடைந்ததாக எந்தவொரு தகவலும் கிடையாது.

முடிவு:



தற்போது சீனாவால் தாக்குதல் நடத்தப்பட்டு 158 இந்திய வீரர்கள் படுகாயமடைந்ததாக பரப்பப்படும் தகவலும், படங்களும் பொய்யானவை.

அடுத்த செய்தி