ஆப்நகரம்

பாகிஸ்தானில் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டாரா ஹிந்துப் பெண்?

ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த பெண் பாகிஸ்தானில் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 12 Dec 2019, 5:41 pm
பாகிஸ்தானில், நீதிமன்ற வளாகத்திலேயே ஹிந்து பெண் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் தகவலின் உண்மைத்தன்மை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆய்வு மேற்கொண்டது.
Samayam Tamil பாகிஸ்தானில் தாக்கப்பட்டாரா ஹிந்து பெண்?


பாகிஸ்தானில் பெண்கள் எப்படி நடத்தப்படுகின்றனர் என்பதை அறிய வேண்டுமா? இதோ இந்த வீடியோவை பாருங்கள் என்ற விளக்கத்துடன், ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது ஓர் ஹிந்து பெண் என்றும், அதனாலேயே அவர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள், போலீஸாரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளார் என்றும் அதில் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அமைதியான பாகிஸ்தானில் குற்றச் செயல்களை புரிந்து வந்ததால் தான், இந்த ஹிந்து பெண் தாக்கப்பட்டார் என, அவர் மீதான தாக்குதலுக்கு இந்த வீடியோவில் நியாயமும் கற்பிக்கப்பட்டுள்ளது.

ஜேஎன்யு மாணவர்கள் போராட்டத்தில் 70 வயது முதியவருக்கு என்ன வேலை?

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகளின் உண்மைத்தன்மை குறித்து, டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.

அதில், இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள பெண், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட ஷாப்பூர் பாங்கு எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், அம்ரத் ஷிஷாதி என்ற பெயர் கொண்ட அந்தப் பெண், முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.

நிலத் தகராறு தொடர்பான ஒரு வழக்கில் ஆஜராகுவதற்காக, நரோவால் சக்கர்கார்க் மாவட்ட நீதிமன்றத்தில் அவர் தமது சகோதரருடன், கடந்த அக்டோபர் மாதம் ஆஜரானார்.

ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண பொங்கல் பண்டிகைக்கு மதுரை வருகிறாரா மோடி?!

அப்போது, நீதிமன்ற நுழைவாயிலில் அவரை வழக்கறிஞர்கள், போலீஸார் ஆகியோர் கொண்ட ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. இதுதொடர்பான செய்தி, கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி, பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் பிரபல நாளிதழான "எக்ஸ்பிரஸ் ட்ரைபியூனில்" பிரசுரமாகி உள்ளது.

அத்துடன், தான் தாக்கப்பட்டது குறித்து ஷிஷாதி அளித்த பேட்டியிலும், தானொரு ஹிந்து என்று அவர் எங்கேயும் குறிப்பிடவில்லை.

இதன் மூலம், நில தகராறு தொடர்பான வழக்கில், எதிர்தரப்பு வழக்கறிஞர்களால் அந்த பெண் தாக்கப்பட்டிருக்கலாமே தவிர, அவர் தாக்கப்பட்டதற்கும், அவர் சார்ந்த மதத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. மேலும், அந்தப் பெண் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பதும் தெரிய வந்துள்ளது.

அடுத்த செய்தி