ஆப்நகரம்

தேசத் துரோக வழக்கில் கைதானாரா இந்திய ராணுவ அதிகாரி?

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ அதிகாரி, தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தானை சேர்ந்த விஷமிகள் ட்லிட்டரில் பரப்பிவரும் தகவல் குறித்த நம்பகத்தன்மையை டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மைக் கண்டறியும் குழு மேற்கொண்டது.

Samayam Tamil 5 Oct 2020, 6:56 pm
பாகிஸ்தானை சேர்ந்த ட்விட்டர் பயனாளர்கள் பலர், சில நாட்களாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விஷயத்தை வைரலாக பரப்பி வருகின்றன. " இந்திய ராணுவ அதிகாரியான தரண்ஜித் சிங்குக்கு எதிராக இந்திய அரசு தேசதுரோக வழக்கை பதிவு செய்து அவரை கைது செய்துள்ளது என்பதுதான் அந்த வைரல் தகவல்.
Samayam Tamil sedition case


" பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரியான தரண்ஜித் சிங், பஞ்சாப்பை இந்தியாவில் இருந்து பிரித்து தனி நாடு கோரி வந்த காலீஸ்தான் இயக்கத்தை மீண்டும் வலுப்பெற செய்யும் நோக்கில், இந்திய ராணுவத்தில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சித்ததன் காரணமாக, தேசதுரோக வழக்கின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அந்த ட்விட்டர் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய ராணுவ அதிகாரியின் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானில் இருந்து சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் விஷமத்தனமான தகவலின் நம்பகத்தன்மை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மைக்கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.

FAKE ALERT: News of Lt Gen Taranjit Singh arrested for sedition fake, Pakistanis inflaming Khalistani separatism

இந்த அதிர்ச்சி தகவல் குறித்து, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடந்த 1 ஆம் தேதி, விளக்க அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், " மதத்தின் அடிப்படையில் நம் நாட்டுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் அரசு தொடர்ந்து தோல்வி சந்தித்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள விரக்தியின் காரணமாக, இந்திய ராணுவத்துக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் விஷமத்தனமான முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது.

ஆனால், இந்திய ராணுவம் மதச்சார்பற்ற கட்டுக்கோப்பான அமைப்பு என்றும், ராணுவத்தில் பணியாற்றும் அதிகாரிகள், வீரர்கள் என்று அனைவரும் ஜாதி, மதம், பாலினப் பாகுபாடு என எந்த வேறுபாடும் இன்றி, நாட்டுக்காக சேவை செய்வது என்ற ஒற்றை நோக்கத்துடன் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.


எனவே, இந்திய ராணுவத்தில் பிரிவினையை தூண்டும் பாகிஸ்தானின் தீய எண்ணம் பலிக்காது" என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் சில தினங்களுக்கு முன் விளக்கம் அளித்திருந்தது.

காலீஸ்தான் இயக்கத்தை வைத்து, இந்திய ராணுவ அதிகாரி தரண்ஜித் சிங் எதிராக பாகிஸ்தானில் இருந்து ட்விட்டரில் இருந்த பரப்பப்பட்டுவரும் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் தவறானது என்று இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FAKE ALERT: குஜராத் கால்வாயில் ராட்சத பயணிகள் கப்பலா - இந்த வீடியோ உண்மையா?

பாதுகாப்பு அமைச்சகத்தின் விளக்க அறிக்கை, இந்திய ராணுவத்தின் ட்விட்டர் பதிவு ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது, ராணுவ அதிகாரி தரண்ஜித் சிங்கிற்கு எதிராக, பாகிஸ்தானில் இருந்து ட்விட்டரில் பரப்பப்பட்டு வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது தெளிவாகிறது..

அடுத்த செய்தி