ஆப்நகரம்

Fake Alert: இந்திய -சீன எல்லைப் பிரச்சினை -சொந்த கிராமத்தை விட்டு வெளியேறினரா பொதுமக்கள்?

லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா -சீனா இடையே நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, இரு நாட்டு எல்லையையொட்டி, அருணாசல பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள டாஸ்கெங்க் கிராமத்தை விட்டு பொதுமக்கள் வெளியேறுவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.

Samayam Tamil 11 Sep 2020, 11:58 pm
லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஜூன் மாதம், சீன ராணுவத்தினருடன் நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து கடந்த சில மாதங்களாகவே இரு நாட்டு எல்லைப் பகுதியிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Samayam Tamil viillages


இதன் காரணமாக, இரு நாட்டு எல்லையொட்டி, (மக்மோகன் கோடு) அருணாசல பிரதேச மாநிலத்தின் தவாங் மாவட்டத்துக்குட்பட்ட டாஸ்கெங்க் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் சொந்த ஊரைவிட்டு வெளியேறி வருவதாக இணைய இதழ்கள் உள்ளிட்டவற்றில் அண்மையில் செய்திகள் வெளியாகின. இதைசமூக வலைதளங்களிலும் சில தினங்களாக இந்த தகவல் வைரலாகி வருகிறது.

ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறானது என்று, திஸ்பூரில் உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சக அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, தவாங் மாவட்ட காவல் துணை ஆணையர், அந்த மாநில அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தை மேற்கோள்காட்டி அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FAKE ALERT: Ministry of Defence calls media reports of villages being vacated in Arunachal Pradesh fake

அத்துடன், அஸ்ஸாம் மற்றும் அருணாசல பிரதேச மாநிலங்களை சேர்ந்த பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவாங் மாவட்ட காவல் துணை ஆணையர், அருணாசல மாநில அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "டாஸ்கெங்க் என்பது நிரந்தர கிராமம் கிடையாது. தவாங் மாவட்டத்தின் ஜிமிதாங் வட்டத்துக்குட்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள், எல்லைப் பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணிக்காக டாஸ்கெங்க்கிற்கு வருவார்கள்.

அவர்கள் அங்கு அமைப்பட்டிருக்கும் தற்காலிக முகாம்களில் தங்குவதும், பணி முடிந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதும் வழக்கம்" என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைக்கப்படாத நீட் தேர்வு... தற்கொலைக்கு முயற்சிக்கின்றனரா மாணவர்கள்?

இவற்றின் மூலம், இந்திய -சீன எல்லைப் பகுதியையொட்டி கிராமத்தில் இருந்து பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர் என்ற தகவல் பொய்யானது என்பது உறுதியாகிறது.

அடுத்த செய்தி