ஆப்நகரம்

FAKE ALERT: கொரோனா: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா?

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று பரவிவரும் தகவல் குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

Samayam Tamil 30 Mar 2020, 4:39 pm
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிவரும் நிலையில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
Samayam Tamil இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா


உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் அதிக அளவில் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் பாதிப்புகள் குறைந்த நிலையில் அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கு ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என கூறியுள்ளார்.

இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்து வந்தாலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அளவுக்கு நிலைமை படு மோசமடையவில்லை. இருப்பினும் இங்கு குறைந்த அளவிலான நபர்களுக்கே கொரோனா சோதனை நடைபெறுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா: ஈரோடு, சென்னையில் அதிகரிப்பு!

இந்தியாவில் பாதிப்பை கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை பிரதமர் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். தற்போது இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளைக் கடந்து வேறு யாரும் எங்கும் செல்ல முடியாது என்ற நிலை உள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படும் என்று வதந்தி பரவி வருகிறது. இதற்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுபா, “21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு மேலும் நீட்டிக்க உள்ளதாக வதந்திகளும், ஊடக தகவல்களும் வெளியாகியிருப்பது முற்றிலும் ஆதாரமற்றது” என்று கூறியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மத்திய அரசுக்கு தற்போது எந்தத் திட்டமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி