ஆப்நகரம்

காந்தி பிறந்த நாளில் வைரலான புகைப்படம் உண்மைதானா?

மகாத்மா காந்தியை கோட்சே சுட்டுக் கொலை செய்த சம்பவத்துக்கு பின் எடுக்கப்பட்டதாக, சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கும் புகைப்படம், உண்மையில் ஓர் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சி என டைம்ஸ் ஆஃப் இந்தியா உண்மைக் கண்டறியும் குழுவின் ஆய்வு தெரிய வந்துள்ளது.

Samayam Tamil 3 Oct 2019, 9:12 pm
மகாத்மா காந்தியின் 150 -ஆவது பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ஒரு புகைப்படம் நேற்று முன்தினம் (அக். 1) வைரலாக பரவியது.
Samayam Tamil ms


துப்பாக்கியால் சுடப்பட்டு நிலைகுலைந்து கீழே சரிந்து விழுந்துள்ள காந்தியை ஒரு நபர் பதற்றத்துடன் பார்க்கும் காட்சியும், காந்தியை சுட்ட, நாதுராம் கோட்சேவை இரண்டு நபர்கள் இறுக்கமாக பிடித்துள்ள காட்சியும் அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.



மகாத்மா காந்தி படுகொலை சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் என்ற படவிளக்கத்துடன் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட இப்புகைப்படம்,ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது.

இதன் உண்மைத்தன்மை குறித்து, டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.

அதில், இது காந்தி படுகொலை சம்பவம் நிகழ்ந்ததற்கு பிறகு எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்பதும், 1963 -ஆம் ஆண்டு வெளிவந்த "nine hours to rama" என்ற ஆங்கில திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி என்பதும் தெரிய வந்துள்ளது.

இதன் மூலம், காந்தியின் பிறந்த நாளையொட்டி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது, அவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பின எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்பது தெள்ளத் தெளிவாகிறது.

அடுத்த செய்தி