ஆப்நகரம்

தொழிலதிபர் அதானியின் மனைவியை சிரம் தாழ்த்தி வணங்கினாரா பிரதமர் மோடி?

தொழிலதிபர் அதானியின் மனைவியான பிரீத்தி அதானியை பிரதமர் நரேந்திர மோடி தலை வணங்குவது போன்று சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்ட வரும் புகைப்படத்தின் நம்பகத்தன்மை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.

Samayam Tamil 17 Oct 2019, 6:22 pm
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அம்பானி, அதானி போன்ற தொழிலதிபர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்து பரப்பப்பட்டு வருகிறது.
Samayam Tamil tmg


மேலும், சுயவிளம்பரத்துக்காக பொது இடங்களை சுத்தம் செய்வது போன்ற செயல்களை அவர் மேற்கொள்ளவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

அண்மையில், மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான சந்திப்பின்போது கூட, பிரதமர் மோடி கடற்கரையில் குப்பை அள்ளுவது போன்ற வீடியோ காட்சி வெளியாகி வைரலாக பரவியது. இதுவும் அவர் சுயவிளம்பரத்துக்காக படப்பிடிப்பு குழுவின் முன்னிலையில் இந்தப் பணியை மேற்கொண்டதாக விமர்சனம் எழுந்தது.

இதுதொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சரும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் "ஜெய் ஸ்ரீராம்" என்ற தலைப்பில் புகைப்பட பதிவுகளை, தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அவரது அந்த பதிவு பிரதமர் மோடியின் மீது அவதூறு பரப்பும் நோக்கில் வெளியிடப்பட்டது என்பது பின்னர் தெரிய வந்தது.

மாமல்லபுரம் கடற்கரையில் பிரதமர் மோடி குப்பை அள்ளியது திட்டமிட்ட நாடகமா?

இந்த விவகாரம் அடங்கிய சில நாள்களிலேயே மற்றொரு சர்ச்சைக்குரிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தின் நன்பகத்தன்மை குறித்து, டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.

அதில், சமூக வலைதளங்களில் தற்போது லைரலாக பரவி வரும் புகைப்படம், கடந்த 2014 -ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 25 -ஆம் தேதி, கர்நாடகவில் எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.

அதாவது, குறிப்பிட்ட நாளில் பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்துக்கு (இஸ்ரோ) சென்ற பிரதமர் மோடி, அதைத்தொடர்ந்து, உணவு பூங்காவை தொடங்கி வைக்க தும்கூருக்கு சென்றார்.

பாகிஸ்தானில் தொலைந்த குழந்தை நாக்பூரில் கண்டெடுக்கப்பட்டதா, ஃபேஸ்புக்கில் வைரலாகும் தகவல் உண்மையா?

அப்போது அந்த நகரத்தின் மேயராக இருந்த கீதா ருத்ரேஷ் பிரதமரை இருகரம் கூப்பி வரவேற்றார். பதிலுக்கு அவரை சிரம் தாழ்த்தி வணங்கினார் பிரதமர் மோடி.

இந்த புகைப்படத்தை வைத்து தான், பிரதமர் மோடி, அதானி மனைவியை தலைவணங்குவதாகக் கூறி, சமூக வலைதளங்களில் தற்போது கருத்து பரப்பப்பட்டு வருகிறது.

இதே போன்ற செய்தி, 2017 -ஆம் ஆண்டு ஏப்ரல் 10 -ஆம் தேதி, நவ்பாரத் டைம்ஸ் உள்ளிட்ட இதழ்களில் இடம்பெற்றுள்ளது.

எனவே, பிரதமர் மோடி சிரம் தாழ்த்தி வணங்குவது தும்கூர் நகர மேயரை தானே அன்றி, தொழிலதிபர் அதானி மனைவியை அல்ல என்பது டைம்ஸ் குழுவின் ஆய்வில் உறுதியாகியுள்ளது.

அடுத்த செய்தி