ஆப்நகரம்

FACT CHECK: வீடு தேடி வரும் திருப்பதி லட்டு பிரசாதம்; பக்தர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

ஏழுமலையான் லட்டு பிரசாதம் வீட்டிற்கே வரும் என்று வசூல் வேட்டை நடத்தும் விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 9 Dec 2020, 2:17 pm
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையான் கோயில் உலகப் பிரபலம். இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் தனிச்சுவை கொண்டது. இதனை பக்தர்கள் தவறாமல் வாங்கிச் செல்வது வழக்கம். இதை திருமலையில் உள்ள பிரத்யேக கவுன்ட்டர்களில் டோக்கன் பெற்று அங்கேயே வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த சூழலில் balajiprasadam.com என்ற பெயரில் இணையதளம் ஒன்று திருப்பதி லட்டு பிரசாதத்தை வீட்டிற்கே வந்து வழங்குவதாக விளம்பரம் செய்து வந்துள்ளது.
Samayam Tamil Tirupati Laddu


அதில், ஒரு லட்டிற்கு 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். 5,000 ரூபாய் செலுத்தினால் ஓராண்டிற்கு மாதந்தோறும் இரண்டு லட்டுகள் வீட்டிற்கு வந்து சேரும். 9,600 ரூபாய் செலுத்தினால் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் இரண்டு லட்டுகள் வீட்டிற்கே வரும் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. 4 லட்டுகள் வேண்டுமெனில் 1,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

உண்மை என்ன?

இது முற்றிலும் தவறான தகவல். மேற்குறிப்பிட்ட இணையதளம் போலியானது.

ஜி.வி. பிரகாஷின் 'பேச்சிலர்' இசையைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

ஆதாரம்

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் balajiprasadam.com என்பது போலியானது. இது பக்தர்களை தவறாக வழிநடத்துகிறது. இந்தியாவில் எங்கிருந்தாலும் வீட்டிற்கே லட்டு பிரசாதம் கிடைக்கும் வகையில் எந்தவொரு ஏற்பாட்டையும் தேவஸ்தான நிர்வாகம் செய்யவில்லை.

இந்த இணையதளத்தை உடனடியாக முடக்க தகவல்தொழில்நுட்பத் துறைக்கு தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் மேற்கூறிய இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.

முடிவு

வீடு தேடி திருப்பதி லட்டு பிரசாதம் வழங்கும் வகையில் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. இது முற்றிலும் தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி