ஆப்நகரம்

ஓசூர் அருகே சிறுவர் பூங்காவில் 5 அடி நீள கட்டு விரியன் பாம்பு!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராமநாயக்கன் ஏரி அருகே உள்ள சிறுவர் பூங்காவில் இருந்து சுமார் 5 அடி நீள கட்டு விரியன் பாம்பு பிடிபட்டது.

Samayam Tamil 30 Nov 2018, 1:33 pm
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராமநாயக்கன் ஏரி அருகே உள்ள சிறுவர் பூங்காவில் இருந்து சுமார் 5 அடி நீள கட்டு விரியன் பாம்பு பிடிபட்டது.
Samayam Tamil 5 அடி நீள கட்டு விரியன் பாம்பு!!
5 அடி நீள கட்டு விரியன் பாம்பு!!


இந்தப் பூங்காவிற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த பூங்காவின் தியான மண்டபம் அருகே 5 அடி நீளம் கொண்ட பாம்பு இருப்பதாக பாம்பு பிடிக்கும் வெங்கடேஷ் என்பவருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்தவர் பாம்பை தேடிப்பிடித்ததில் அது விஷத்தன்மை அதிகமாக உள்ள கட்டு விரியன் பாம்பு என்றும், இதனை பிடித்து பேரண்டப்பள்ளி அடர் வனப்பகுதிக்குள் விட்டுவிடுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ''பாம்புகளில் பலவகை உள்ளது ஒவ்வொன்றுக்கும் விஷத்தன்மை மாறுபடும் என்பதால் யாரும் பாம்பை பிடிக்க முயற்சிக்க வேண்டாம். பாம்பு இருப்பதாக தகவல் தெரிவித்தால் நாங்களே பாம்பை உயிருடன் பிடித்து செல்வோம்'' என்றார்.

தையல் கலைஞரான வெங்கடேஷ் இதுவரை 2000த்துக்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து காப்பாற்றிருப்பதாக தெரிவித்தார்
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்