ஆப்நகரம்

காவிரி விவகாரம் : கிருஷ்ணராஜசாகர் அணையை முற்றுகையிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது!

ஒசூரிலிருந்து மைசூர் அருகேயுள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டை முற்றுகையிட சென்ற, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் ஒசூர் எல்லையில் வைத்து கைது செய்தனர்.

Samayam Tamil 14 Apr 2018, 2:48 pm
ஒசூரிலிருந்து மைசூர் அருகேயுள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டை முற்றுகையிட சென்ற, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் ஒசூர் எல்லையில் வைத்து கைது செய்தனர்.
Samayam Tamil cpi2-1523692677


காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கக் கோாி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுபெற்று வருகின்றன. எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில்காவிரி உரிமை மீட்பு நடைபயணத்தை மேற்கொண்டார் .

இதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒசூரில் இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் மைசூர் நோக்கி நடை பயணம் சென்று கே.ஆர்.எஸ் அணையை முற்றுகையிடுவதாக அறிவித்தனர்.

சுமார் 500 பேர் நடை பயணத்தில் பங்கேற்றனர்.இருப்பினும் ஒசூர் பஸ் நிலையம் அருகே அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது காவல்துறையினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


ஏற்கனவே கர்நாடக-ஒசூர் எல்லையான அத்திபெலே பகுதியில், கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்களை கர்நாடக காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

அடுத்த செய்தி