ஆப்நகரம்

சாரை சாரையாய் வந்து சேர்ந்த தமிழர்கள்; எங்கே இருந்து வந்தாங்க இவ்வளவு பேரும்?

கர்நாடகா மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சாரை சாரையாக வந்து சேர்ந்தனர்.

Samayam Tamil 10 May 2021, 12:56 pm
கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று அதிக வேகமாக உள்ளது. இதன் காரணமாக கடந்த மாதம் 28ம் தேதி இரவு முதல் இன்று வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
Samayam Tamil சொந்த ஊருக்கு திரும்பும் தமிழர்கள்
சொந்த ஊருக்கு திரும்பும் தமிழர்கள்


ஊரடங்கு காலத்தில் பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்திற்கு கர்நாடக மாநில அரசு தடை விதித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓசூர் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கர்நாடகாவில் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் கூடிய தீவிரமான ஊரடங்கை வரும் 24ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதற்கிடையே கர்நாடகாவில் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் தொழிற்சாலைகள் இயங்கி வந்தன. ஆனால் தற்போதைய ஊரடங்கில் அதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஒரே இடத்தில் 25 ஆண்டு பணி; செவிலியருக்கு கிடைத்த பரிசு!

மேலும், உணவு மற்றும் காய்கறி வாங்குவதற்கு கூட இருசக்கர வாகனங்களில் மக்கள் வெளியே வர தடை என்கிற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இத்தகைய சூழலில் எந்த பணிகளை மேற்கொள்ள முடியாது என்பதால் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பணியாற்றி வருகிற தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் கர்நாடகா மாநிலத்தில் இருந்து மனைவி மற்றும் குழந்தைகளுடன், மூட்டை முடிச்சுகளை சுமந்தபடி தமிழக எல்லை பகுதிக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து இயக்கப்பட்ட அரசு பஸ்கள் மூலம் தங்களது ஊர்களுக்கு சாரை சாரையாக வந்து சேர்ந்தனர்.

அடுத்த செய்தி