தனது தொகுதியில், அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்ட பெற்றோருக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என, மிசோரம் மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் ராபர்ட் ரோமவியா அறிவித்துள்ளார். இந்தியாவில் பல மாநிலங்கள், மக்கள் தொகை கட்டுப்படுத்துவதற்கான கொள்கையை வெளியிட்டு உள்ளன. இந்நிலையில், வட கிழக்கு மாநிலமான, மிசோரம் மாநிலத்தில், உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு விழா ஒன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அமைச்சர் ராபர்ட் ரோமவியா கூறியதாவது:
எனது தொகுதி, அயிஸ்வால் கிழக்கில், அதிக குழந்தைகள் கொண்ட பெற்றோருக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். அவர்களுக்கு சான்றிதழும், கேடயமும் வழங்கப்படும். இதற்கு ஆகும் செலவை, எனது மகன் நடத்தும் கட்டுமான நிறுவனம் ஏற்றுக் கொள்ளும். மிசோரம் மக்களின் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் இடையே உள்ள வித்தியாசம் கவலைக்குரியதாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கலந்து கொண்ட அமைச்சர் ராபர்ட் ரோமவியா கூறியதாவது:
எனது தொகுதி, அயிஸ்வால் கிழக்கில், அதிக குழந்தைகள் கொண்ட பெற்றோருக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். அவர்களுக்கு சான்றிதழும், கேடயமும் வழங்கப்படும். இதற்கு ஆகும் செலவை, எனது மகன் நடத்தும் கட்டுமான நிறுவனம் ஏற்றுக் கொள்ளும். மிசோரம் மக்களின் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் இடையே உள்ள வித்தியாசம் கவலைக்குரியதாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.