ஆப்நகரம்

கருப்புப் பண நடவடிக்கை:நாடாளுமன்றத்தில் கடும் அமளி..!

மத்திய அரசின் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது.

TNN 18 Nov 2016, 12:53 pm
மத்திய அரசின் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது.
Samayam Tamil  lok sabha adjourned till monday
கருப்புப் பண நடவடிக்கை:நாடாளுமன்றத்தில் கடும் அமளி..!


இன்று காலை மாநிலங்களவை துவங்கியதும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.பிக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.இதனைத் தொடர்ந்து காலை 11.30 மணி வரை மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.மேலும் எதிர்கட்சிகளின் கவனத்தை திசை திருப்புவதற்காக குலாம் நபி ஆசாத் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

கருப்புப்பணம் நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக
இருப்பதாக பாஜக அமைச்சர்கள் தெரிவித்தனர்.ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாத மக்களவை எதிர்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.ஒரு கட்டத்தில் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால்,மக்களவையை வரும் திங்கள்கிழமை வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

Lok Sabha adjourned till Monday.

அடுத்த செய்தி