ஆப்நகரம்

சவுமியா கொலை வழக்கு: தமிழருக்கு தூக்கு ரத்து

ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணை கீழே தள்ளி பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் தமிழகத்தை சேர்ந்தவரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

TOI Contributor 15 Sep 2016, 4:50 pm
புதுடெல்லி: ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணை கீழே தள்ளி பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் தமிழகத்தை சேர்ந்தவரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil  sc set aside death sentence given to convicted govindachamy in soumya murder case however held him guilty of rape
சவுமியா கொலை வழக்கு: தமிழருக்கு தூக்கு ரத்து


கேரளா, பாலக்காடு மாவட்டம் சொரனூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் சவுமியா. இவர் கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி, ரயிலில் மகளிர் பெட்டியில் பயணம் செய்தார். அப்போது, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கை ஊனமுற்ற கோவிந்தசாமி அந்தப் பெண்ணை கற்பழிக்க முயன்றார். அவரிடம் இருந்து சவுமியா தப்பிக்க முயன்றார். அப்போது, ஓடும் ரயிலில் இருந்து சவுமியாவை கீழே தள்ளிய கோவிந்தசாமி, பின்னர் கற்பழித்துக் கொன்றார்.

கோவிந்தசாமி தமிழகம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர். இவர் மீது கேரளா திருச்சூர் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, கண்ணூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த தண்டனையை கேரள உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.

கோவிந்தசாமி தரப்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சவுமியாவை கீழே தள்ளி கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி தூக்கு தண்டனையை ரத்து செய்தது. இருப்பினும் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 7 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அடுத்த செய்தி