ஆப்நகரம்

சி.ஏ.ஏ. விவகாரம்: மேகலாயாவிலும் இருவர் பலி

​​மேகாலயாவில் வாழும் பழங்குடிகள் அல்லாத மக்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ​​

நாடு முழுக்க குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஏற்படுத்தியிருக்கும் பதற்றநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆரவாரமான போர்ச்சத்தம் குறைந்திருக்கிறது என்றாலும், அழுகையும் ஓலமும் அதையும் மீறி அதிகரித்து வருகிறது.
Samayam Tamil Shillong


தீர்த்து வைக்க வேண்டிய அரசும் இந்தப் பிரச்சினையை முடித்துவைத்தால் போதும் என்று செயல்பட்டு வருகிறது. காவல்துறை, உள்துறை, பிரதேச முதலமைச்சர் எனப் பலரும் இது குறித்து விவாதித்துக்கொண்டே இருக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் எதிர்த்தும் ஆதரித்தும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மேகாலயாவிலும் தற்போது இரண்டு உயிர்கள் பலியாகி உள்ளன.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். மேகாலயா முழுவதையும் 'இன்னர் பெர்மிட்டின்' கீழ் கொண்டு வர வேண்டும் என்று கே.எஸ்.யு. மாணவர் அமைப்பு மற்றும் பழங்குடியின அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

CAA protest: கலவர பூமியான டெல்லி

மேகாலயாவில் வாழும் பழங்குடிகள் அல்லாத மக்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மேகாலயாவின் கிழக்கு காஸி ஹில்ஸ் மாவட்டத்தில் இரு பிரிவினருக்கு மத்தியிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது கே.எஸ்.யு.மாணவர் அமைப்புக்கும் பழங்குடிகள் அல்லாத மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இருதரப்பினரும் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இதில் கே.எஸ்.யு.அமைப்பை சேர்ந்த ஒருவர்உயிரிழந்தார். மேலும் சிலர் காயமடைந்தனர்.


இதைத் தொடர்ந்து மேகாலயா முழுவதும் எதிர்பாராத அளவுக்கு கலவரம் வெடித்தது. தலைநகர் ஷில்லாங் உட்பட பல்வேறு நகரங்களில் பல அரசு வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மக்களின் வீடுகள்,கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.

தொடர்ச்சியாக ஷில்லாங்கில் நேற்று நடைபெற்ற கலவரத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதன்மூலம் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.



11 மாவட்டங்கள் கொண்ட சிறிய நிர்வாக மாநிலமான மேகாலயாவில் தற்போது 6 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி