ஆப்நகரம்

இளைஞர்களைத் தேடி வரும் வேலை; அதுவும் 10 லட்சம் பேருக்கு - அதிரடி அறிவிப்பு!

விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, வேலைவாய்ப்பு தொடர்பான முக்கிய வாக்குறுதி தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

Samayam Tamil 17 Oct 2020, 3:48 pm
பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் 28ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் வரும் நவம்பர் 10ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. கூட்டணி உடன்பாடு, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்டவை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்த சூழலில் ’மகாகத் பந்தன்’ எனப்படும் மெகா கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil Mahagathbandhan manifesto


ராஷ்டிரிய ஜனதா தளம் 144 தொகுதிகளிலும், காங்கிரஸ் 70, இடதுசாரிகள் 29 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மெகா கூட்டணியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

அரசு தேர்வுகள் எழுதும் இளைஞர்களுக்கான செலவை மாநில அரசு ஏற்றுக் கொள்ளும். மாநில பட்ஜெட்டில் 12 சதவீதம் கல்விக்காக செலவிடப்படும். தொடக்கப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், மேல்நிலைப் பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுவர்.

என் நெஞ்சை பிளந்தால் மோடி இருப்பார்: சிராக் பஸ்வான் பக்தி!

அனைத்து பள்ளிகளிலும் கலை, கணினி, விளையாட்டு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர். ’ஸ்மார்ட் கிராம் யோஜனா’ மூலம் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒரு மருத்துவர், செவிலியர் அடங்கிய கிளினிக் அமைக்கப்படும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய சட்டங்களை பீகார் மாநிலத்தில் ரத்து செய்யப்படும். இதற்கான முடிவுகள் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி