ஆப்நகரம்

பள்ளியில் 10 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை- துப்பறிவு பணியாளர் கைது

உணவு இடைவேளையின் போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 10 வயது பள்ளி மாணவி. குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் துப்பறிவு பணியாளர் கைது.

Samayam Tamil 10 Feb 2019, 1:30 pm
பள்ளி வளாகத்தில் வைத்து 10 வயது மாணவி ஒருவர் துப்பறிவு பணியாளரால் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
Samayam Tamil coimbatore-police


உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் உயர்தரமான கல்விக்காக தனது உறவினரால் டெல்லிக்கு அழைத்து வரபட்டார். ஷாஹதாரா பகுதியில் உள்ள பள்ளியில் அந்த சிறுமி படித்து வந்தார்.

சம்பவதன்று, பள்ளியில் துப்பறிவு பணிகளை செய்து வரும் ஷியோராஜ் என்பவர், மதிய உணவு நேர இடைவேளையின் போது சிறுமியை மிரட்டு உடை மாற்றும் அறைக்கு இழுத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த சிறுமியை அவர் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், இங்கு நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என ஷியோராஜ் சிறுமிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். வீட்டுக்கு வந்த சிறுமி சரியாக தூங்காமலும், உணவு உட்கொள்ளாமல் இருப்பதையும் பார்த்து உறவினர்கள் சந்தேகமடைந்தனர்.

அப்போது கேட்ட போது, சிறுமி நடந்த சம்பவங்களை குறித்து கூறியுள்ளார். அதை தொடர்ந்து உடனே, உறவினர்கள் ஷியோராஜ் மீது போலீசில் புகார் அளித்தனர். புகாரை பதிவு செய்த காவல்துறை துப்பறிவு பணியாளரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷியோராஜ் மீது பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் சிறார் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் டெல்லி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

அடுத்த செய்தி